Skip to main content

நகைக்கடன் வழங்கியதில் 4.60 கோடி ரூபாய் மோசடி; 3 ஊழியர்கள் பணிநீக்கம்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

 

4.60 crore fraud in jewelery loan disbursement; 3 employees fired!


சேலம் அருகே, போலி ஆவணங்கள் தயாரித்து நகைக்கடன்கள் வழங்கியதில் 4.60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். செயலாளர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களுக்கு நகைக்கடன்கள் வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின. 

 

இது குறித்த புகாரின்பேரில், குண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் தணிக்கை செய்ய சேலம் மண்டல இணை பதிவாளர் உத்தரவிட்டார். சார்பதிவாளர்கள் நடத்திய தணிக்கையில், மோசடி நடந்திருப்பது உறுதி படுத்தப்பட்டது. 

 

இதையடுத்து, சங்க செயலாளர் பழனிசாமி, உதவி செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

 

இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ''குண்டுக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த தணிக்கையில், இரண்டு விதங்களில் மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 172 நகைக்கடன்கள் வழங்கியதில் 1.96 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதாவது, போலி நகைகளுக்கும், கணக்கில் வராத நகைகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டு இருந்தது. இது முதல் வகை.

 

அடுத்ததாக, சங்க உறுப்பினர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து 119 நகைக்கடன்கள் மூலம் 2.64 கோடி ரூபாய் சுருட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

 

மோசடி நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகிய மூவரையும் சங்கத் தலைவர் சரஸ்வதி டிஸ்மிஸ் செய்துள்ளார். 

 

நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட மேற்சொன்ன சங்க ஊழியர்களுக்குச் சொந்தமான சுமார் 7 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. செயலாளர் பழனிசாமி மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவரும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்,'' என்றனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

Published on 06/01/2024 | Edited on 06/01/2024

 

தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் பிராட்வேயில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நேற்று (5ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story

கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சி.வி. கணேசன்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Minister CV Ganesan provided welfare assistance during the Cuddalore Cooperative Week

 

கடலூரில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களாகத் தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டுறவு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் 9830 பயனாளிகளுக்கு 92 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

 

அப்போது அவர் பேசுகையில், ‘கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் முன்னேற்றத்தையும் கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் உறவினியோகம், இரு பொருள்கள் விநியோகம், பொதுவிநியோகம் திட்டம் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்தல், நகை கடன் மற்றும் இதர கடன் வசதி திட்டங்கள் மகளிர் மற்றும் ஆடவர் குழுக்கள் மூலம் கடன் வழங்குதல் போன்ற சேவைகளை கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன இதில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பணி பாராட்டத்தக்கது எனப் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.