Skip to main content

கவர்ச்சி விளம்பரம்... பிரபல தங்க வர்த்தக நிறுவனத்தில் 3.41 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

3.41 crore rupees cash seized from famous gold trading company!

 

ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் 3.41 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

'ஆருத்ரா கோல்டு கம்பெனி' என்ற நிறுவனம் தங்கம் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழிலை செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள செய்யூர் என்ற இடத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் ஒன்று வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடு விதித்து அதற்குள் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் மாதம் 30,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பத்து மாதத்திற்கு இதுபோல் வட்டி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

3.41 crore rupees cash seized from famous gold trading company!

 

இந்த கவர்ச்சியான விளம்பரம் குறித்து பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் 26 இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சோதனையில் 3.41 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சோதனையில் 48 கணினிகள், 6 லேப்டாப்கள், 44 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.