Skip to main content

செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 18 பேர் ஆந்திராவில் கைது!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

 18 Tamils ​​arrested in Andhra Pradesh for kidnapping sheep

 

செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக ஆந்திர போலீசாரால் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த நாராயணவனம் என்ற பகுதியில் ஆந்திர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கிப்பிடித்துச் சோதனையிட்டுள்ளனர். அதில் செம்மரக்கட்டைகள் இருப்பதும் தெரியவந்தது. அந்த காரில் வந்த 4 பேரை கைது செய்து  நடத்திய விசாரணையில் அங்குள்ள சதாசிவகோனா என்ற மலைப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அவை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 18 Tamils ​​arrested in Andhra Pradesh for kidnapping sheep

 

இதனையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ஆந்திர மாநில காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். உடனே சதாசிவகோனா மலை பகுதிக்குச் சென்ற போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் 1.5 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 298 செம்மரக்கட்டைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு மட்டுமல்லாது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.