Skip to main content

1.20 கோடி ரூபாய் கடன் பாக்கி - மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்! 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

1.20 crore loan outstanding - Officers seal Madhuvanthi's house!

 

பாஜக பிரமுகரும் நடிகையுமான மதுவந்தி கடன் பாக்கியை தராததால் அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் நடிகையுமான மதுவந்திக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீடு உள்ள நிலையில், அந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் அவர் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீனஸ் காலனியில் வாங்கப்பட்ட அந்த வீட்டிற்காக வாங்கிய கடனில் 1.26 கோடி ரூபாயை மதுவந்தி திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிற நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற அந்த நிதி நிறுவனத்தினர் மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகளுடன் வந்து சீல் வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்