Skip to main content

''இது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது... இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா...''-செல்லூர் ராஜூ ஆவேசம்!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

 '' This is what makes me sad ... whether this party should be ... '' - Cellur Raju furious!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''இது உட்கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்சனை. இப்பொழுது அதை பூதாகரமாகக் கொண்டுவந்து விமர்சனம் செய்கிறார்கள். இதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. திமுகவில் என்ன ஜனநாயக முறை இருக்கிறது. திமுகவில் சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியுமா? ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது இந்த கட்சி தான், இது மாதிரி எத்தனை விஷயங்களை சொல்லலாம். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இப்படி எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுகதான். இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா... திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்னைக்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? சினிமா துறை சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? இந்த கட்சி ஒன்னுதாங்க 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்திருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை வழங்கியுள்ளது. 'ஆட்சி அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்கின்ற பணி. நாங்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சேவகனாகதான் இருப்போம்' என்று எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட கொள்கை உடையவரின் நோக்கத்தை நிலைநாட்ட அதிமுக தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து நானே செய்தியாளர்களைச் சந்தித்து நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்வேன். இப்பொழுது நான் சொல்வது என்னவென்றால் அதிமுக தொண்டர்கள், குறிப்பாக ஜாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி இந்த இயக்கத்தை பிரிப்பதற்கு யார் எத்தனித்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். எம்ஜிஆரை பொறுத்தவரை ஜாதி பார்த்தது கிடையாது, மதம் கிடையாது. நாம் எப்பொழுதுமே மதசார்பற்ற இயக்கமாக இருந்திருக்கிறோம். இந்த இயக்கமும் அப்படித்தான். ஒரு நாயரை தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி அதிமுக, ஒரு பிராமணப் பெண்ணை தலைமையாகக் கொண்டு இயங்கிய கட்சி அதிமுக, சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓபிஎஸ்-இபிஎஸ் இன்றைக்கு முதல்வர்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் இந்த கட்சி தான். எனவே இதைத் தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நான் சின்ன வயசிலிருந்தே எம்ஜிஆர் படம் பார்த்தவன். எனக்கு அப்பனும் எம்ஜிஆர்தான்... தலைவனும் எம்ஜிஆர் தான்.. வழிகாட்டியும் எம்ஜிஆர் தான். அதன் பிறகு என் தலைவி. இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும். இந்த இயக்கம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து வரும். எவனாலும் எங்களை அசைக்க முடியாது. எங்கள் தொண்டர்களைப் பிரித்து வேறு கட்சியில் சேர்த்து விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அவர்கள் நினைப்புதான் தவிடு பொடியாகிவிடும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.