Skip to main content

''இது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது... இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா...''-செல்லூர் ராஜூ ஆவேசம்!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

 '' This is what makes me sad ... whether this party should be ... '' - Cellur Raju furious!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''இது உட்கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்சனை. இப்பொழுது அதை பூதாகரமாகக் கொண்டுவந்து விமர்சனம் செய்கிறார்கள். இதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. திமுகவில் என்ன ஜனநாயக முறை இருக்கிறது. திமுகவில் சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியுமா? ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது இந்த கட்சி தான், இது மாதிரி எத்தனை விஷயங்களை சொல்லலாம். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இப்படி எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுகதான். இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா... திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்னைக்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? சினிமா துறை சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? இந்த கட்சி ஒன்னுதாங்க 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்திருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை வழங்கியுள்ளது. 'ஆட்சி அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்கின்ற பணி. நாங்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சேவகனாகதான் இருப்போம்' என்று எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட கொள்கை உடையவரின் நோக்கத்தை நிலைநாட்ட அதிமுக தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து நானே செய்தியாளர்களைச் சந்தித்து நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்வேன். இப்பொழுது நான் சொல்வது என்னவென்றால் அதிமுக தொண்டர்கள், குறிப்பாக ஜாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி இந்த இயக்கத்தை பிரிப்பதற்கு யார் எத்தனித்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். எம்ஜிஆரை பொறுத்தவரை ஜாதி பார்த்தது கிடையாது, மதம் கிடையாது. நாம் எப்பொழுதுமே மதசார்பற்ற இயக்கமாக இருந்திருக்கிறோம். இந்த இயக்கமும் அப்படித்தான். ஒரு நாயரை தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி அதிமுக, ஒரு பிராமணப் பெண்ணை தலைமையாகக் கொண்டு இயங்கிய கட்சி அதிமுக, சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓபிஎஸ்-இபிஎஸ் இன்றைக்கு முதல்வர்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் இந்த கட்சி தான். எனவே இதைத் தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நான் சின்ன வயசிலிருந்தே எம்ஜிஆர் படம் பார்த்தவன். எனக்கு அப்பனும் எம்ஜிஆர்தான்... தலைவனும் எம்ஜிஆர் தான்.. வழிகாட்டியும் எம்ஜிஆர் தான். அதன் பிறகு என் தலைவி. இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும். இந்த இயக்கம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து வரும். எவனாலும் எங்களை அசைக்க முடியாது. எங்கள் தொண்டர்களைப் பிரித்து வேறு கட்சியில் சேர்த்து விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அவர்கள் நினைப்புதான் தவிடு பொடியாகிவிடும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.