Skip to main content

''மனசாட்சியை தொட்டு சொல்லுங்க போரை நடத்தியது யார்...? அப்படித்தான் எதிர்ப்பேன்'' -சீமான் கோபம்!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Touch your conscience and tell me who waged the war? -Seeman Anger!

 

அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி சார்பாக பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் திமுகவை விமர்சித்ததோடு காலணியை எடுத்துக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக திமுகவின் ஐ.டி விங் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள்தான் என்று சொன்னது நானா... அவரா... நீங்களே சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் தான் 90 விழுக்காடு சங்கி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தீர்கள். பிஜேபி வராமல் இருப்பதற்கு நீங்கள் செய்த வேலை என்ன? வெறுமனே கட்டமைப்பது பாஜகவின் பீ டீம் என்று போகிற போக்கில் திரும்பு திரும்ப அதையே பேசிக் கொண்டிருப்பது. இதுதான் திராவிட ஃபிராடு. அவர்களுடைய வேலையே இதுதான். காலம்காலமாக போய் பேசி அதையே கட்டமைத்து அதை உண்மை போல ஆக்குவது தான் அவர்களுடைய வேலை. அங்கிருந்துதானே நான் வந்திருக்கிறேன் என்ன பண்ணுவாங்க என்று எனக்கு தெரியாதா? அதனால்தான் நீங்கதான் உண்மையான சங்கி என சொல்ல வேண்டிய நிலை வருகிறது. தேவையில்லாமல் சங்கி சங்கி என்றெல்லாம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் வெறுப்பு வருமா வராதா... நானும் மனுஷன் தானே.  இன்று பொறுப்பும் கடமையும் கையளிக்கப்பட்டிருப்பதால் பொறுமையாக இருக்கிறேன்.

 

மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்கிறீர்கள் ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வில்லை. அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால்தானே. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்த நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே விடுதலை செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய பாசிசம். எவ்வளவு பெரிய மதவாதபோக்கு. ஆனால் வெளியில் நீங்கள் சொல்லும்போது மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்வீர்கள். முதல்வரே பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது 'அப்பாவி இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காவது எனக்கு வாக்கு தாருங்கள்' என பேசியுள்ளார். வாக்கும் தந்தாச்சு ஏன் விடுதலை செய்யவில்லை. சாதி ஆணவப்படுகொலை என்பதை தமிழ் படுத்தினேன். சாதி ஆணவம் என்று சொல்கிறீர்கள் அதை தமிழில் சொல்லுங்கள்... தமிழன் தமிழில் பேசுவதில் என்ன பிரச்சனை. கன்னியாகுமரியில் நடந்த கொலைக்கு நான் ஒரே ஒருத்தன் மட்டும் தான் குரல்கொடுத்திருந்தேன். யாராவது ஒருவர் இதைப் பற்றி பேசி இருந்தார்களா? ஆணவப்படுகொலையை நான் என்னவோ ஆதரித்துக் கொண்டிருப்பதுபோல் சொல்கிறீர்கள். 'சாதி தமிழ் இல்லை தமிழனுக்கு சாதி இல்லை'  என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் பிற கட்சிகளை எதிர்ப்பதை விட திமுகவை தான் அதிகமாக எதிர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்ப,

 

''அப்படித்தான் எதிர்ப்பேன்... அப்படித்தான் தம்பி எதிர்ப்பேன்... காரணம் திமுக எனது இனத்தை கொன்ற துரோகி. கலைஞருக்கு எங்க அண்ணனை பிடிக்காது.  எனக்கு கலைஞரை பிடிக்காது போதுமா... என் இனத்தை கொன்றது காங்கிரஸ்... கூட நின்றது திமுக... அதை வேடிக்கை பார்த்தது அதிமுக-பாஜக எனவே எல்லாருமே எனக்கு எதிரிதான். சம தராசில் வைத்து தான் நான் சண்டை போடுவேன்.  உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் போரை நடத்தியது காங்கிரஸா இல்லையா. மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவர்கள். அடுத்தவர்கள் எல்லாம் சொல்லி தெரிந்து கொள்ளக்கூடிய இடத்தில் நான் இல்லை நானே சான்று. எந்த அளவிற்கு கலைஞர் தமிழினத்திற்கு துரோகம் செய்தார் என்று தெரியும். அதிமுக சரியில்லை ஆனால் அதிமுகவை பிரசவித்த தாய் திமுக. மோடி சரியில்லை சரி, அந்த மோடியை ஆட்சியில் உட்கார வைத்தது யாரு... காங்கிரஸ் 10 ஆண்டுகால அதிகாரத்தை சரியாக, ஒழுங்காக, முறையாக நிர்வாகத்தை செய்திருந்தால் மோடி எப்படி வருவார். நீ செய்த அயோக்கியத்தனத்தால் வந்த குழந்தைதான் மோடி. பாஜக இவ்வளவு பெரும்பான்மையுடன் வெல்வதற்கு காரணமே காங்கிரஸ் தான். எதை எதிர்க்க வேண்டும் எதை எதிர்க்கக் கூடாது என்பதை நாங்கள் தான் முடிவு எடுப்போம்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது