Skip to main content

''திரைப்படத்தை எதிர்த்து, நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள்''-சீமான் ஆவேசம்

Published on 21/11/2021 | Edited on 21/11/2021

 

 "They opposed the film and closed all the problems in the country," Seaman said

 

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் படத்திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,

 

''கடந்த 12 நாட்களாக ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்து நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள். அணுக்கழிவை இடிந்தகரையிலேயே புதைக்கலாம் என்று ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது. இதை ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா? என்றால் பதில் இல்லை. நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தபோது நீட்டி முழக்கி அழுதவர்கள் இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் நீட் தேர்வால் ஆறு குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள். இதற்குப் பதில் என்ன? ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றீர்களே அதற்கு என்ன பதில்? பள்ளி, கல்லூரிகளுக்குப் பிள்ளைகள் செல்ல முடியவில்லை. ஆசிரியர்களே பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவமானம் தாங்காமல் பிஞ்சுகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எவரும் பேசவே இல்லை. வன பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் வந்தால் காடுகளை முழுக்க தனியார் மையப்படுத்தி விடுவார்கள். அந்த ஆபத்து தெரிந்து நாம் போராடுகிறோம். அதைப் பற்றி பேச்சு கிடையாது.

 

மீன்வள சட்டம். கடலில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் கடலுக்கு போகும் போது இரண்டு லட்சம் ரூபாய் கட்டிவிட்டுதான் போகவேண்டும். இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் மீனவன் எதற்கு மீன்பிடிக்க போகிறான். அதை வைத்தே வாழ்ந்திருக்க மாட்டானா? 12 நாட்டிகல்லுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும். அதுவும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மீன்பிடிக்க கூடாது. நான் பிடித்த மீனின் மதிப்பு பத்தாயிரம் ரூபாயா, ஏழாயிரம் ரூபாயா என்பது கரைக்கு வந்தால் தானே தெரியும். இது என் கடல், என் நிலம், என் உரிமை. 12 நாட்டிக்கல் மைலுக்கு கொஞ்சம் தள்ளி சென்று விட்டால் படகை பறித்துக் கொள்ளலாம், வாழ்நாள் முழுக்க மீன் பிடிக்க தடை என இந்த சட்டம் சொல்கிறது. இதைப்பற்றி ஒருவர் பேசியது உண்டா? சத்தமில்லாமல் திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலை போடுகிறார்கள். நாங்கள் கேட்கவே இல்லையே... நாங்கள் கேட்டது கச்சத்தீவை மீட்க சொல்லி, நீட் வேண்டாம் என்கின்றோம், ஜிஎஸ்டி வேண்டாம் என்கிறோம். நாங்கள் எதிர்த்து போராடியதை எதையுமே கேட்பதில்லை, நாங்கள் போராடாததையெல்லாம் திணிப்பது. ஜெய்பீம் சிறந்த படம். மக்களினுடைய வலியை தூக்கி ஒரு தலைமுறைக்கு உணர்த்துகிற படம், இனிமேல் இதுபோல் ஒன்று நடந்து விடக்கூடாது என உணர்த்துகிற படம்.

 

காடுவெட்டி குருவை ஆதரித்துவிட்டார் சீமான் ஜாதி சாக்கடை, சாதி வெறியர் என்று எழுதி விமர்சிக்கிறார்கள். இதை எழுதுவது யாருடைய ஆட்கள் என தெரியுமா? காடுவெட்டி குருவின் நினைவிடத்தில் விழுந்து கும்பிட்டு மாலை வைத்து வாக்கு கேட்டவர்கள்தான் என்னை சாதி வெறியர்கள் என்கிறார்கள். அவரது மகன் கனலை கூட்டிக்கொண்டு அறிவாலயத்தில் சந்தித்து எங்களை ஆதரியுங்கள் என்று மாலையைப் போட்டு வரவேற்ற மகத்தான பெருமக்கள் என்னை சாதி வெறியன் என்கிறார்கள். அவரது மருமகன் மனோஜை கூப்பிட்டு, மகளைக் கூட்டிக்கொண்டு சென்று அறிவாலயத்தில் சந்தித்து உதயநிதி, காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவிக்கிறார். அப்போது வராதா சாதிவெறி. டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்கும்பொழுது சட்டசபையில் பேசுகிறார், 'பாலுத்தேவரின் மகன் ராஜா தேவர்' என பேசுகிறார். பக்கத்தில்தான் முதல்வர் இருக்கிறார். அதையெல்லாம் பார்த்த பெருந்தகைகள். அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் திருச்சியில் நடந்த ரெட்டியார் மாநாட்டில் பேசிய பேச்சுக்கள் இருக்கின்றன. அவை எல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு உறுத்தவில்லை. அவையெல்லாம் ஏன் பிரச்சனையாகவில்லை. அதையெல்லாம் ஏன் பேச மாட்டுகிறீர்கள். உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? நாங்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே சாதி பார்த்து ஓட்டு போட்டால் அந்த ஓட்டு எனக்கு தீட்டு என பேசிய ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே'' என்றார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.