Skip to main content

பிச்சையெடுக்கும் நிலை: மக்களவையில் தம்பிதுரை பேச்சு: பாஜக கடும் எதிர்ப்பு

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
thambidurai



மக்களவையில் இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை இடைக்கால பட்ஜெட் குறித்து பேசினார்.
 

அப்போது, விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது போதாது. தற்போது அறிவித்த சலுகைகள் ஏன் 2018ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைப்போல உள்ளது.
 

நூறுநாள் வேலைத் திட்டத்திலுள்ள குறைகளால் மக்கள் என்னை முற்றுகையிட்டு கேள்வி கேட்கின்றனர். நூறுநாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என என்னிடம் கிராம மக்கள் கூறுகின்றனர். நூறுநாள் வேலைத் திட்டத்தின் கொள்கையை மாற்றியது மிகப்பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் படுதோல்வி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா ஆகிய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. 
 

பங்களாதேஷிலிருந்து துணிகள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேட் இன் இந்தியா என கூறுகிறீர்கள். ஆனால் சீனப் பட்டாசுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு திட்டத்தின் பயன் என்ன? பண மதிப்பிழப்பால் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 

ஜி.எஸ்.டி. வரி வசூலில் தங்களது பங்கை பெற மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. இதுவரை தரவில்லை. ஜெயலலிதா முதல் தற்போதைய அரசு வரை கோரிக்கை விடுத்தும் இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை. 


தானே, வர்தா, ஒகி, கஜா என பல புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் பலமுறை அரசு மீது நம்பிக்கை அளித்து வாக்களித்தோம். ஆனால் அரசு எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. 
 

கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என பேசினார்.
 

தம்பிதுரை பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தப்படியே இருந்தனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.