Skip to main content

கடந்தகால அவமானங்களைத் துடைக்கவே காங்கிரஸுடன் கூட்டணி! - குமாரசாமி

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

கடந்தகால அவமானங்களைத் துடைத்தெறியவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருப்பதாக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் திடீர்த் திருப்பமாக தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு மும்முனைப் போட்டி நிலவிவந்த நிலையில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவடைதற்கு முன்னதாகவே தோல்வியை உணர்ந்த காங்கிரஸ் ம.த.ஜ.விற்கு ஆதரவளித்தது. இதனால், 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க. ஆட்சியமைக்கும் வாய்ப்பு பறிபோனது. 

 

kumarasamy

 

இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம்பேசி வலைவிரிப்பதாக குற்றம்சாட்டினார். பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்ற கேள்வியை முன்வைத்தபோது, காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

 

மேலும், இரு தரப்பில் இருந்தும் எனக்கு கூட்டணி வாய்ப்புக்கான அழைப்பு வந்தது. இதை வெறுமனே உளறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 2004 மற்றும் 2005ஆம் ஆண்டு நான் எடுத்த தவறான முடிவினால் என் தந்தையின் அரசியல் வாழ்க்கையில் கறுப்புப்புள்ளி ஏற்பட்டது. மக்களும், கடவுளும் அந்தக் கறுப்புப்புள்ளியை துடைத்தெறியும் வாய்ப்பைத் தந்திருக்கின்றனர். அதற்காகவே நான் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

2004 - 05 காலகட்டத்தில் தனது தந்தையின் வார்த்தைகளையும் மீறி, குமாரசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். இதனால், ம.ஜ.த. என்ற கட்சியே இரண்டாக பிளவுபட்டது. மதச்சார்பற்ற கட்சியான ம.ஜ.த. ஒரு மதவாத கட்சியுடன் கூட்டணி வைப்பதா என பலரும் விமர்சித்தனர். இத்தனை விமர்சனங்களும் குமாரசாமியின் தந்தை தேவகவுடாவை மனமுடையச் செய்தன. தற்போது அதைத் துடைத்தெறிவதாக குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” - டி.கே.சிவக்குமார்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

DK Sivakumar says I will quit politics if Kumaraswamy proves his allegations

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 68,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதனிடையே, ,வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

 

இந்த நிலையில்,குமாரசாமி நேற்று (21-11-23) போஸ்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கர்நாடகாவில் ஆபாச படங்களை திரையிட்டவரை தான் ஆட்சி அதிகாரத்தில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், இந்த மாதிரி ஆட்களிடம் தான் அதிகாரத்தை கொடுத்துள்ளது.  இது போன்ற படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால் இப்படி தான் போஸ்டர்களை ஒட்டுவார்கள்” என விமர்சித்து குற்றம் சாட்டினார்.

 

குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “குமாரசாமியை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனது தொகுதி கனகபுராவிற்கு சென்று நான் ஆபாச படங்களை திரையிட்டேனா? என்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி அங்கு யாராவது, நான் அந்த மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னாலோ அல்லது குமாரசாமி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபித்தாலோ நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. அவரது தரத்திற்கு இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு தான் அவமானம்” என்று கூறினார். 

 

 

Next Story

71 யூனிட் திருட்டு; குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 71 units of theft; Kumaraswamy was fined Rs 68,000

 

மின்சாரம் திருடிய குற்றத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது கர்நாடகா அரசு.

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசும் வீடியோ காட்சிகளை சம்பந்தமின்றி பரப்பி வருவதாக குமாரசாமி மீது கர்நாடகா காங்கிரசினர் புகார் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் 71 யூனிட் மின்சாரம் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது குமாரசாமிக்கு 68,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பெங்களூர் மின்சார வாரியம்.