Skip to main content

கே.கே.எஸ்.எஸ்.ஆரை மறித்து கேள்விமேல் கேள்வி! - அந்த கிராமத்தில் இரவில் நடந்த ரசாபாசம்!

Published on 08/01/2021 | Edited on 09/01/2021

 

Question to dmk KKSSR

 

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திமுக தொடங்கிய மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், ஜனவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம், தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்களை, திமுகவினர் நடத்திய வண்ணம் உள்ளனர்.  

 

எம்.எல்.ஏ.வாக 8-வது முறை சட்டமன்றம் செல்லும் சீனியரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மூன்று தடவை தமிழக அமைச்சராக இருந்தவர். திமுக தற்போது எதிர்க்கட்சி என்றாலும், இன்று வரையிலும் அவர் ‘மந்திரி’ என்றே அழைக்கப்படுகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அவர், விருதுநகர் தாலுகாவிலுள்ள துலுக்கபட்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த இரவு நேரத்தில், அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஒன்று காத்திருந்தது.

 

Question to dmk KKSSR

 

ரயில் கடந்து செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் சென்றதும் கேட் திறக்கப்பட, அண்ணாச்சியின் வாகனம் மெல்ல நகர்ந்தது. அதுதான் தருணம் என்று அங்கே சிலர் காத்திருந்தனர். அண்ணாச்சியும் அவர்களது கோரிக்கை என்னவென்று அமைதியாகக் கேட்டார். அவர்களோ, பேச்சில் ஆவேசத்தைக் காட்டினார்கள். பேசியபடியே அவர்கள் சூழ்ந்துகொள்ள ஒரு நெருக்கடி வளையத்துக்குள் சிக்கினார் அண்ணாச்சி.

 

எடுத்த எடுப்பிலேயே, “எங்க ஓட்டு உங்களுக்கு வேணுமா?” என்றுதான், அவர்கள் ஆரம்பித்தனர். அடுத்து, “நீங்க ஏன் பேசல? தேவேந்திரகுல வேளாளர் குறித்து உங்க தலைவர் ஏன் பேசல? ஏன் அறிவிக்கல?” என்று வார்த்தைகளால் உலுக்கியெடுத்தனர். அதற்கு அண்ணாச்சி “உங்கள தேவேந்திரகுல வேளாளர்ன்னு அறிவிக்கிறதுல, யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. சொல்லப்போனா.. நாங்களே இதை அறிவிச்சிருக்கோம். மற்றபடி, இந்தச் சலுகை வேணும்; வேணாம்கிறது குறித்து லீடர்ஸ்கிட்ட பேசிக்கங்க. இதையெல்லாம், அந்தந்த தலைவர்கள்தான் பேசணும். நாங்க பேச முடியாது. ஆமா.. தேவேந்திரகுல வேளாளர் பட்டியலை இந்த கவர்மெண்டே அனவுன்ஸ் பண்ணலாம்ல” என்று திருப்பிக் கேட்க, அந்தக் கூட்டம் ஏனோ உஷ்ணமானது.

 

Question to dmk KKSSR

 

அவர்களைச் சமாளிக்கும் விதத்தில் அண்ணாச்சி “எல்லா இடத்திலும் நாங்க தேவேந்திரகுல வேளாளர்ன்னுதான் பேசிக்கிட்டிருக்கோம்” என்று சொல்ல, “உங்க தலைவர்தான், ஊரு ஊரா கிராமசபைக் கூட்டத்துல பேசிக்கிட்டிருக்கார்ல. அங்கே ஏன் பேசல?” என்று அவர்கள் எகிற, சூழ்நிலைக்கேற்ப அண்ணாச்சி “தளபதி இந்தப் பக்கம் வரவே இல்லப்பா.. அப்படி வரும்போது பேசாம இருந்தா சொல்லுங்க..” என்று கூல் பண்ண முயற்சித்தார். ஆனாலும், அந்தத் தரப்பு ஆத்திர வார்த்தைகளை உதிர்த்தபடியே இருந்தது. யாரோ, யாரையோ “வாடா..போடா..” என ஒருமையில் பேசி, கூச்சலிட்டனர். பிறகு அண்ணாச்சியிடம் “உங்க தொண்டர்கள் யார் யாரு இருக்கா? நீங்க என்ன செஞ்சீங்க? என்னங்க செஞ்சிட்டு இருக்கீங்க? இத்தனை நாளா நாங்க பிரச்சனைலதான இருக்கோம்” என்று தங்களது மனவலியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அண்ணாச்சி அந்த இடத்தைவிட்டு நகரமுடியாதவாறு, நெருக்கமாக நின்று நேருக்குநேர் வாக்குவாதம் செய்தனர்.

 

Question to dmk KKSSR


நாம் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அவர், “அதுவந்து தேவேந்திரகுல வேளாளர்ன்னு நம்ம கட்சி சார்பா சொல்லணும்னு சொன்னாங்க. நம்ம தலைவர் சொல்லிட்டாரு. என்னைக்குன்னா.. 11-9-2020 ல் அறிவாலயத்துல வச்சி இமானுவேல் சேகரன் படத்தை திறந்து வைக்கிறாரு. அப்பவே, தேவேந்திரகுல வேளாளர்னு அறிவிக்கிறதுக்கு.. மத்திய, மாநில அரசாங்கத்தோடு போராடி அந்த உரிமையைப் பெற்றுத் தருவோம்னு சொல்லிட்டாரு. அதைத்தான் அவங்க கேட்டாங்க. சொல்லியாச்சுன்னு சொன்னதுக்கு இன்னொரு தடவை சொல்லச் சொல்லுங்கன்னாங்க. அப்புறம்,  தேர்தல் அறிக்கையிலும் வரணும்னாங்க. அவங்ககிட்ட நான் மோடி சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆனா.. மோடி செய்யல. அவருகிட்ட கேட்கிறத விட்டுட்டு எங்ககிட்ட கேட்கிறீங்க. நாங்க இதுக்கு முழு சப்போர்ட்டா இருக்கோம்னு சொன்னேன். வந்தவங்ககூட பிஜேபி ஆளுங்களும் இருந்தாங்க. இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல” என்றபோது, அவரது அனுபவ முதிர்ச்சி வெளிப்பட்டது.

 

கே.கே.எஸ்.எஸ்.ஆர். நடந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், உ.பி.க்களுக்கோ ஆதங்கம். “அண்ணாச்சிக்கு 71 வயசாச்சு. இருட்டு நேரம் வேற. இப்படியா அவரை மறிச்சு ஆளாளுக்கு பேசுறது? தள்ளுமுள்ளுல ஒன்னு கிடக்க ஒன்னாச்சுன்னா யாரு பொறுப்பு? போன எம்.பி. தேர்தல்ல அவங்க கட்சி அதிமுகவோடுதான கூட்டு வச்சது. ஆளும்கட்சி மந்திரி, எம்.எல்.ஏ.வை மறிச்சு கேட்க வேண்டியதுதான? அதை விட்டுட்டு திமுக எம்.எல்.ஏ.கிட்ட வம்பு பண்ணுறாங்க. இதுல நிச்சயமா அரசியல் இருக்கு” என்றனர்.

 

தொண்டாமுத்தூரில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அமைச்சர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு ‘ஸ்டாலினை விடமாட்டோம்’ என்று வசை பாடினார். அதன் எஃபெக்டோ என்னவோ, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் இந்த மாவட்டத்தில், ஏதோ ஒரு ரூட்டில் குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.