Skip to main content

நாராயணசாமியின் ஆட்சியை விரும்பவில்லையா திமுக?

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

ddd

 

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது! பெரும்பாண்மையை நிரூபிப்பதற்காக இன்று (22.02.2021) கூட்டப்பட்ட புதுவை சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, மத்திய பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதற்கு  எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. நம்பிக்கை வாக்கெடுப்பினை எதிர்கொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநடப்பு செய்தார் நாராயணசாமி. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் நாராயணசாமி. 

 

இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென திமுக எம்.எல்.ஏ.வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுக எம்.எல்.ஏ. எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்? அவரது ராஜினாமா முடிவு  திமுக தலைமைக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எதிரொலித்த நிலையில், "தலைமையிடம் சொல்லிவிட்டுத்தான் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார் வெங்கடேசன். அவரின் இந்த பதில், காங்கிரசை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.வின் இந்த ராஜினாமா விவகாரத்தால், நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டதா? என்கிற கேள்வி புதுவை அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, "திமுக தலைமையின் அனுமதியோடுதான் வெங்கடேசன் ராஜினாமா செய்தார் என்பது உண்மையெனில், நாராயணசாமியின் ஆட்சியை  திமுகவும் விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாம். திமுக தலைமையிடம் தெரிவிக்காமல் வெங்கடேசன் ராஜினாமா செய்திருந்தால், தங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள திமுக நினைக்கவில்லை என்று அர்த்தம். 

 

அதேசமயம், தலைமைக்குத் தெரிவிக்காமலே அவர் ராஜினாமா செய்திருப்பதுதான் உண்மையெனில், வெங்கடேசனை இந்நேரம் கட்சியிலிருந்து  திமுக தலைமை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அது தற்போது வரை நடக்கவில்லை. அதனால், நாராயணசாமியின் அரசை விரும்பாமல் அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும்விதமாகவே வெங்கடேசனின் ராஜினாமாவை திமுக எடுத்துக்கொண்டதாக நினைக்க முடிகிறது. மொத்தத்தில் நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டது "என்று ஆதங்கப்படுகிறார்கள் புதுவை காங்கிரஸார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.