Skip to main content

பெயர் பலகை விவகாரத்தில் மோதல்... நடவடிக்கை எடுக்க எம். ஹைதர்அலி வலியுறுத்தல்

Published on 21/07/2021 | Edited on 22/07/2021
dddd

 

சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் எம்.ஹைதர்அலி என்பவர் தமுமுக தலைமை அலுவலகம் என பெயர் பலகை மற்றும் கொடி வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லா தரப்பினர், அந்த பெயர் பலகையையும், கொடியையும் உடைத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

 

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹைதர்அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு சொஸைட்டி சட்டம் கீழும் (பதிவு எண் 1/2015),இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு முறையாக இயங்கி வருகிறது.

 

இந்த நிலையில்  மண்ணடியில் உள்ள எங்கள் தலைமையகத்தின் பெயர்ப்பலகை புனரமைக்கப்பட்டு மாட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள், காயிதேமில்லத் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஹாஜாகனி மற்றும் தாம்பரத்தில் செருப்பு வியாபாரம் செய்யும் யாகூப் ஆகியோருடன் வந்தவர்கள் நேற்று நண்பகலில் காவல்துறை வசம் புகார் அளித்து இருக்கின்றனர்.

 

புகாரின் அடிப்படையில் எங்களிடம் விசாரணை செய்த சென்னை மாநகர கடற்கரை காவல் நிலைய ஆய்வாளரிடம் எங்கள் அமைப்பு சார்ந்த ஆவணங்கள் ஒப்படைத்து அவர்கள் நீதிமன்ற தடை இருப்பதாக குறிப்பிடும் எஸ். ஹைதர்அலி நான் அல்ல என்பதையும் அந்த இடைக்கால வழக்கு தமுமுக அறக்கட்டளை தொடர்பானது என்பதையும் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அவர்கள் எப்படி தங்களுக்கு  சாதகமாக சொல்கிறார்கள் என்று விளக்கினோம்.

 

ஆனால் இதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் மேற்குறிப்பிட்டவர்களுடன்  வந்தவர்கள் எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை தாக்கியதோடு எங்கள் அமைப்பின் பெயர்பலகையை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

 

மாநிலத்தில் உள்ள எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அனைவருக்கும் நல்லாட்சி வழங்கிட உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டு கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.