Skip to main content

மோகன் பாகவத் பாகிஸ்தான் எல்லையில் காவல் காக்கவேண்டும்! - ஓவைசி கருத்து

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ராணுவத்தைவிட வேகமாக தயாராகி விட முடியுமென்றால், மோகன் பாகவத் பாகிஸ்தான் எல்லையில் நின்று காவல் காக்கவேண்டும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய மஜ்லிஸ் இட்ல்காத்-உல்- முஸ்லிமீன் அமைப்பின் தலைவரான அசாத்துதீன் ஓவைசி பேசுகையில், ‘ஒரு கலாச்சார அமைப்பால் எப்படி ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெறமுடியும்? அவரது இந்தக் கருத்தை உற்று நோக்கவேண்டும். எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை ராணுவ வீரரோடு ஒப்பிடமுடியும்? மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து மிகவும் மோசமானது. அது பல உள்ளர்த்தங்களையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

 

Mohan

 

மேலும், ஆவேசமாகப் பேசிய அவர், ‘ஒருவர் ராணுவ வீரராக உருவாக எவ்வளவு பாடுபட வேண்டும் என்று மோகன் பாகவத்துக்குத் தெரியுமா? நம் இந்திய வீரர்கள் செத்துமடிந்து தியாகம் செய்வதை நாடு அறியும். மோகன் பாகவத் தாம் கூறிய கருத்தை நம்புகிறார் என்றால், பாகிஸ்தான் எல்லையில் போய் காவல் காக்கட்டும்’ என கூறியுள்ளார்.

 

முன்னதாக, பீகாரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் பேசிய மோகன் பாகவத், ‘போர் வந்தால் இந்திய ராணுவம் தயாராக ஆறேழு மாதங்கள் ஆகலாம். ஆர்.எஸ்.எஸ்.க்கு மூன்று நாட்களே போதுமானது’ எனக் கூறியது கிளப்பியது.

சார்ந்த செய்திகள்

Next Story

 மனரீதியாக துன்புறுத்தப்பட்ட அபிநந்தன்?

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

    

 

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் மனரீதியாக  துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

n

 

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்ட  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.   அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அபிநந்தன் கூறியதாக முன்னர் வெளியான வீடியோ பதிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. நல்லமுறையிலும், கண்ணியமாகவும் பார்த்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று  தகவல் வெளியிட்டுள்ளது. 


 

Next Story

பிரனாப் மற்றும் மோகன் பாகவத் எண்ணங்கள் ஒன்றே! - ராம் மாதவ்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

பிரனாப் மற்றும் மோகன் பாகவத்தின் எண்ணங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
 

pranab

 

 

 

கடந்த ஜூன் 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அந்த அழைப்பை ஏற்றிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரனாப் முகர்ஜி தேசம், தேசியவாதம், தேசப்பற்று குறித்து பேசினார். 
 

ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ரந்தீப் சர்ஜீவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரனாப் முகர்ஜியின் உரையை வெகுவாக பாராட்டி இருந்தாலும், பலர் பிரனாப் கலந்துகொண்டதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். 
 

 

 

இந்நிலையில், பிரனாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துகொண்டது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ், ‘ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே வெளிப்படையான அமைப்பாக இருந்து வருகிறது. அது முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததின் பேரில், அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் பெரும்பான்மையானவை மோகன் பாகவத்தின் எண்ணங்களை ஒத்திருந்தன. அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகள்தான் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன’ என தெரிவித்துள்ளார்.