Skip to main content

நீங்கள் கோஷ்டி அரசியல் செய்வதற்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? பொதுமக்கள் கேள்வி

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
CV Shanmugam


விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் குடியநல்லூர் கிராமத்தில் ஏற்கனவே திறக்கபட்ட சேவை மைய கட்டிடத்தில் இன்று மாலை 4 மணியளவில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் திறப்பு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

இந்த ஆரம்ப சுகாதார  நிலையமானது கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு முயற்சியால் கொண்டுவரபட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு மாவட்ட அமைச்சர் சிவி. சண்முகம், அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்எலஏ, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காமராஜ் எம்பி ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த விழாவில் தொகுதி எம்எல்ஏவிற்கு அழைப்புவிடுக்காமல் மாவட்ட நிர்வாகம் புறகணிக்கபட்டுள்ளது. 
 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற பல லட்சம் மதிப்பிலான கட்டிட திறப்பு விழா மற்றும் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள விருப்பம் காட்டாத அமைச்சர் இன்று நடக்கும் விழாவில் முக்கியத்துவம் காட்டுவது ஏன்? அவசியம் என்ன? என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 

இந்த அரசு விழாவில் தொகுதி எம்எல்ஏ பிரவு அழைக்கப்படவில்லை. அழைப்பிதழில் பெயர் போடவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் அழைப்பிதழில் பெயர் போடுவார்கள். அழைக்கப்படுவார்கள். ஆனால் இன்று திறப்பு விழா நடத்தும் கட்டிடம் முழுக்க முழுக்க எம்எல்ஏ பிரபுவால் கொண்டுவரப்பட்டது. அவரையே அழைக்காதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

mla prabhu kallakurichi


 

இதுகுறித்து எம்எல்ஏ பிரபு கூறுகையில், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மாறுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் பொதுவாக இருந்து செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் அழைப்பிதழில் பெயர் போட்டியிருக்க வேண்டும், என்னை அழைத்திருக்க வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டிடத்தை கொண்டு வந்ததே நான்தான். தொகுதி எம்எல்ஏவான நான் இந்த விழாவிற்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

அதிமுக எம்எல்ஏவான பிரபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாகவே அழைப்பிதழில் பிரபு பெயர் போடப்படவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 
 

நீங்கள் கோஷ்டி அரசியல் செய்வதற்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? விழாவை ரத்து செய்ய வேண்டும் என கட்சிக்கு அப்பார்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.