Skip to main content

''பாஜகவின் பிரிவினைவாத திட்டத்தை முறியடிக்கதான் இந்த பாதயாத்திரை''-கே.எஸ்.அழகிரி பேச்சு!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

 '' This march is to defeat the separatist plan of the BJP '' - KS Alagiri speech!

 

பாஜக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் விதமாக அக்கட்சி தொண்டர்கள் அடங்கிய குழு கொடுமுடியிலிருந்து நடைபயணம் செல்லும் நிகழ்ச்சியை 10 ந் தேதி அக்கட்சியின்  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மகாத்மா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி எம்.பி, கொ.ம.தே.க.சார்பில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ரகுராம், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஈரோடு தெற்கு மாவட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் பேரியக்க தொண்டர்கள் இன்றிலிருந்து 10 நாட்கள் 250 கிலோ மீட்டர் பயணம் செய்து 250 கிராமங்களை சென்றடைந்து மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து பிரச்சார பயணம் மேற்கொள்வார்கள். தி.மு.க.அரசு திறம்படச் செயலாற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார். இந்த ஆட்சி தொடர வேண்டும்.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கில மொழி பயன்பாட்டில் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி எழுதப்படாத உத்தரவாதம் தந்து உறுதியாக கடைபிடித்தது.

 

பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்திய நாடு சிதறி விடக்கூடாது என்று மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினார். அதனால்தான் இன்றைக்கும் இந்தியா ஒற்றுமையுடன் திகழ்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்களுக்கு ரூபாய் ஒன்றுக்கு 65 பைசா நிதியாக வழங்கினார். இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு ரூபாய்க்கு 35 பைசா வழங்குகிறது. மாநில அரசுகளின் நிதியைக் குறைத்தால் அரசின் நிர்வாகம் எப்படி நடக்கும். அரசாங்கம் செயலிழந்துவிடும். இதுதான் மத்திய அரசின் நோக்கம். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. அரசின் திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் பேரியக்கம் பாதயாத்திரை மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.