Skip to main content

ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை

Published on 24/08/2018 | Edited on 24/08/2018

 

M. K. Alagiri


செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். 

 

 


இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இசக்கி முத்து, முபாரக் மந்திரி, மன்னன், கோபிநாதன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இசக்கி முத்து, முபாரக் மந்திரி, மன்னன், கோபிநாதன் ஆகியோர் தங்களது நண்பர்கள், உறவினர்கள், தங்களுடன் உள்ள திமுகவினரையும் அழைத்து வந்திருந்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் 5ஆம் தேதி மாலை இந்த பேரணி நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்திடம் தொலைபேசியில் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
Rajinikanth

 

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்று அல்லது இரண்டு மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து சென்னை திரும்ப உள்ளதாகவும் மு.க.அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ரஜினிக்கு வாழ்த்து சொல்லிய அழகிரி...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
M. K. Alagiri

 

 

'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். 

 

"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்ப" தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.

 

ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டப் பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொலைபேசியில் ரஜினியைத் தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி, உங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி என்று பதில் நன்றி கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது.

 

மு.க.அழகிரி பாஜகவில் சேரப் போகிறார், புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார், கலைஞர் திமுகவும் உருவாகப் போகிறது என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த நிலையில், ''நான் கட்டாயம் பாஜகவில் சேர மாட்டேன், நான் கலைஞர் மகன்'' என சொல்லியிருந்தார். திமுகவின் துணை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கோபியின் தம்பி மருது இறந்ததை துக்கம் விசாரிக்க சென்ற அழகிரி செய்தியாளர்களிடம், ''என்னை தொந்தரவு   செய்யாதீர்கள். நான் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. என்னோட தொண்டர்களிடம் ஆலோசனை செய்த பிறகே எதையும் சொல்வேன்'' என்று கூறிச்சென்ற நிலையில் தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.