Skip to main content

கடலில் குதிக்க சொன்னாலும் குதிப்போம்: அழகிரி ஆதரவாளர்கள் பேட்டி

Published on 24/08/2018 | Edited on 25/08/2018
M. K. Alagiri

 

 

 

செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். 
 

 

இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

 

 

மண்டபத்திற்கு வெளியே நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தொண்டர்கள், 
 

 

மதுரைக்கு அழகிரி வந்ததில் இருந்து நாங்கள் அவருக்கு ஆதரவாக உள்ளோம். அவர் சொல்லுகிற வழியில் நடப்போம். தற்போது நாங்கள் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் திமுகவை விட்டு போக மாட்டோம். கருப்பு சிவப்பு வேட்டிதான் கட்டியிருக்கோம். அழகிரி என்ன முடிவு எடுக்கிறாரோ, அதனை ஏற்று நடப்போம். அவர் கடலில் குதிக்க சொன்னாலும் குதிப்போம். 
 

 

 

இது எங்கள் கட்சி. நாங்கள் எங்கும் போகமாட்டோம். தலைவர் பதவிக்கு அழகிரி என்றைக்கும் ஆசைப்பட்டது இல்லை. அழகிரி என்ன சொல்கிறார், கட்சியை ஒழுங்காக வழி நடத்துங்கள், ஜால்ரா கூட்டங்களை கூட வைத்திருக்காதீர்கள் என சொல்கிறார். நாங்கள் தலைவர் பதவி கேட்கவில்லை, முதல் அமைச்சர் பதவி கேட்கவில்லை, தகுதியான பதவியை கேட்கிறோம், உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறோம் அவ்வளவுதான். பாஜக பின்னால் இருப்பதாக சொல்வதெல்லாம் பொய் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்திடம் தொலைபேசியில் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
Rajinikanth

 

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்று அல்லது இரண்டு மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து சென்னை திரும்ப உள்ளதாகவும் மு.க.அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ரஜினிக்கு வாழ்த்து சொல்லிய அழகிரி...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
M. K. Alagiri

 

 

'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். 

 

"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்ப" தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.

 

ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டப் பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொலைபேசியில் ரஜினியைத் தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி, உங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி என்று பதில் நன்றி கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது.

 

மு.க.அழகிரி பாஜகவில் சேரப் போகிறார், புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார், கலைஞர் திமுகவும் உருவாகப் போகிறது என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த நிலையில், ''நான் கட்டாயம் பாஜகவில் சேர மாட்டேன், நான் கலைஞர் மகன்'' என சொல்லியிருந்தார். திமுகவின் துணை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கோபியின் தம்பி மருது இறந்ததை துக்கம் விசாரிக்க சென்ற அழகிரி செய்தியாளர்களிடம், ''என்னை தொந்தரவு   செய்யாதீர்கள். நான் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. என்னோட தொண்டர்களிடம் ஆலோசனை செய்த பிறகே எதையும் சொல்வேன்'' என்று கூறிச்சென்ற நிலையில் தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.