Skip to main content

இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்றுகூடத் தெரியாதவர் அமைச்சராக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது: உ.வாசுகி வலியுறுத்தல்

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
yugadi

 

அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறையைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் சமூக சீர்திருத்தப் பிரச்சாரத்தை நடத்துவதகு தமிழக அரசு முன்வர வேண்டுமென்றார் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி. புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

’’காவேரி படுகை அமைந்துள்ள 5 மாவட்டங்களை உள்ளடக்கி ஹைட்ரோகார்பன் மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது. விவசாயத்தை, சுற்றுச்சூழலை, நீராதாரத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் இத்தகை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து வாலிபர், மாணவர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் வருகின்ற ஏப்ரல் 1 முதல் 4-ஆம் தேதிவரை தீவிரப் பிரச்சாரமும், 5ஆம் தேதிமுதல் தொடர் ரயில் மறியல் போராட்டமும் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்கமும் இணைந்துகொள்கிறது.

 

உச்சநீதிமன்றத் இறுதியான தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சம் இழைத்துவருகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

 

பெண்கள் மீதான வன்முறை

நிர்பயா கொலைக்குப் பிறகு பெண்ணை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வது குற்றப்பிரிவாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக்தில் காதலிக்க மறுத்தால் வெட்டிக்கொலை, குத்திக்கொலை, சமீபத்தில் மதுரையில் கொளுத்திக்கொலை என்கிற அளவுக்கு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இப்பொழுதுதான் மாநில மகளிர் ஆணையத் தலைவராக கண்ணகி பாக்கியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயக மாதர்சங்கம் மற்றும் என்ஜிஓக்களை இணைத்துக்கொண்டு மாவட்ட அளவில் ஒரு சமூக சீர்திருத்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஆண், பெண் சமம் குறித்து பள்ளிகளில், பொது இடங்களில், பாடப்புத்தகங்களில் விவாதிக்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் சாதி ஆணவக்கொலையே நடக்கவில்லை என ஆட்சியாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஆணவக் கொலைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசியுள்ளார். இது வரவேற்கத் தக்கது. சாதி, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழக அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. அத்திக்கடவு-அவினாசி திட்டங்கள் ஒவ்வொரு வருடமும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். அவர்களுக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குரங்கணியில் மலையேற்றத்திற்கு வனத்துறை எப்படி அனுமதி வழங்கியது. அல்லது வனத்துறைக்கு தெரியாமல் இது நடந்தது என்றால் இந்த வனப்பகுதி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?

 

அமைச்சருக்கு கண்டனம்.

ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் ரீதியாக ஒரு பெண் நிருபர் கேள்வி கேட்டதற்கு நீங்க அழகா இருக்கீங்க. உங்க கண்ணாடி பிரேம் அழகா இருக்கு என்று மிக மோசமான முறையில் பேசி இருக்கிறார். பத்திரிக்கை நிருபர். அவர் ஒரு உழைக்கும் பெண். கேள்வி கேட்பது அவரது கடமை. பதில் இருந்தால் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவரே சொன்னதைப் போல சீனியர்கள் சொல்வார்கள் என ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஆணாக இருந்தால் இப்படி கேட்டு இருப்பாரா? இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்றுகூடத் தெரியாதவர்தான் அமைச்சராக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரத்தில் நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இது பெண்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர வகுப்பினரின் குடியிருப்புப் பகுதிகளையே குறிவைத்து இது நடக்கிறது. காவல்துறையினர் இரவு ரோந்துப்பணியினை அதிகப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான பேருந்து நிறுத்துமிடங்களில் நிழல்குடை அமைக்க வேண்டும். குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக கவுண்டர் பெட்டிசன் போடும் கலையை புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை பெற்றிருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை இல்லாத நிலையில் கடும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மாற்றுவேலை இல்லாத நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு உலோகத் தொழிற்சாலை அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு உ.வாசுகி தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

''ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையே உறுதிமொழியாக ஏற்றுள்ளார்'' - உ.வாசுகி பேச்சு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

"The governor has taken an oath to speak untruths"- U. Vasuki speech

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வள்ளலார் - 200’ சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பேசினார்.

 

அவர் பேசுகையில், ''இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் கருத்தரங்கம் அமைந்துள்ளது. தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையும், நடப்பதையும், உறுதிமொழி எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். சனாதனத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தவர். இவரை சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி பொய்யாகப் பேசியுள்ளார். ஒன்றியத்தில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர்.

 

வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம்தான் உண்மையான வாழ்க்கைநெறியென மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால், பாஜகவினரின் கருத்துகள், செயல்பாடுகள் வள்ளலாருக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மோடியின் ஆட்சியில் பசியையும் வறுமையும் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பசி, வறுமை கணக்கெடுப்பில் 127 உலக நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா உள்ளது. சாதி, சமயம், மூடநம்பிக்கை மதங்களை வள்ளலார் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். ஆனால், மோடி அரசு இவற்றை மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகள், தத்துவத்திற்கு ஏற்ப தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் சொல்வது போல் மதவெறி அரசியலை நிராகரிப்பதில் முன்வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சனாதன எதிர்ப்பில் வலுவாக உள்ளது. வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அன்பு செலுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களும் எந்த சாதி, மதமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கொள்கை வகுத்து போராட்டக்களத்தில் நிற்கக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.

 

மேலும், பெண்களும் குழந்தைகளும் வன்முறைகளால் பாதிக்கப்படும்போது முதலில் களத்தில் இறங்குவது மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச்சென்ற இப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பொதுவுடைமை தத்துவத்தோடு இணைத்து தமிழகத்தில் அப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிற இயக்கமாக செங்கொடி இயக்கம் இருக்கிறது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா மற்றும்  நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


 

Next Story

குஷ்பு கொடுத்த பதிலும் மாதர் சங்க வாசுகியின் கேள்வியும்!

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

The answer given by Khushbu; Mathar Sangha Vasuki's question too

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் பதவியில் இருந்து திமுக நீக்கியது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது குறித்தும் குஷ்பு செய்தியாளர் சந்திப்பு குறித்தும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகியை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் ஒரு பகுதி: 

 

பாஜகவில் இருக்கக்கூடிய டெய்ஸிக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது குஷ்பு அமைதியாக இருந்ததற்கு காரணம் என்ன?

 

எல்லா விஷயத்திற்கும் குஷ்பு தலையிட வேண்டும் என அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாஷேத்ரா விவகாரத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, 'என்னை பற்றி விமர்சனம் செய்தால் தான் மாதர் சங்கம் லைம் லைட்டுக்கு வரும்’ என எங்களது பொதுச்செயலாளருக்கு பதில் அனுப்பியிருந்தார் குஷ்பு. இதற்கு பதில் அளித்த நான், ஜனநாயக மாதர் சங்கத்துக்கு அந்த புகழெல்லாம் தேவை இல்லை. இத்தனை வருடங்களில் அந்த புகழை எதிர்பார்த்து  நாங்கள் காவல் துறையிடமும், சமூக விரோதிகளிடமும் மோதவில்லை. உங்களை பற்றி அதிகமாக யோசிக்கிறீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.

 

ஆனால், ஆணைய உறுப்பினர் என்ற முறையில் முக்கியமான விஷயங்களில் குஷ்பு தலையிட வேண்டும். குற்றவாளிகள் பலரும் அவருடைய கட்சியில் இருப்பதன் பின்னணியில் பாஜக உறுப்பினராக இல்லாமல் மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து அவருடைய கட்சி தலைமையோடு கூட குஷ்பு மோத வேண்டிய அவசியம் ஏற்படும். அவர் அதை செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறுகின்றோம்.

 

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராடிக் கொண்டிருந்தபோது குஷ்பு அமைதியாக இருந்ததன் காரணம் என்ன ?

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவில் இருந்தால் பாஜக தரப்பினர் தேடித் தேடி அதில் தலையிடுவார்கள். சமீபத்தில் கூட மைக்கல்பட்டியில் பள்ளி சிறுமி மரணம் அடைந்த விஷயத்தில் குழந்தை உரிமைகள் ஆணையம் உடனே தேடி வந்து விசாரித்தார்கள். அதில் காட்டிய கவனம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளிலும் காட்ட வேண்டும். காஷ்மீர் கத்துவாவில் நடந்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கவனம் காட்டியது இல்லை. அதே போல் உத்தரப்பிரதேசம் உன்னாவ் சம்பவம் உட்பட அந்த மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் பல நிகழ்ந்து உள்ளன. ஆனால், மகளிர் ஆணையம் அங்கு என்ன கவனம் காட்டியது என்ற கேள்வி எழுகிறது.

 

பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நோக்கத்தை வைத்து கொண்டு பார்ப்பது, எதிர்க்கட்சியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டால் உடனே அதில் தலையிடுவது மற்றும் மைக்கல்பட்டி போன்ற மத சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போன்று குறிப்பிட்ட விஷயத்தில் தான் தலையிடுகிறார்கள். மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில், நீதிமன்றத்தில் விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர அங்கு போராடும் வீராங்கனைகளுக்கு நேரில் சென்று ஆதரவு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது. சட்டம் எங்களுக்கு தெரியவில்லையா அல்லது குஷ்புவுக்கு தெரியவில்லையா என்று தான் நான் கேட்கிறேன்.

 

உங்களுடைய கணவருடைய  சொத்தை பாதுகாப்பதற்குத்தான் கட்சி மாறுகிறீர்களா என்று குஷ்புவிடம் ஒருவர் கேட்டபோது, உங்கள் வீட்டுப் பெண்களை வைத்துத்தான் நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார் குஷ்பு. பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய குஷ்பு பிறர் வீட்டுப் பெண்களை இழிவாகப் பேசுகிறாரே?

 

எல்லோருக்கும் அளவுகோல் என்பது சமம் தான். பெண்களை பாலியல் ரீதியாக அவதூறுகள் செய்யக்கூடாது என்று சொன்னால் அது அனைவருக்கும் சமமான ஒரே நிலைப்பாடுதான். குஷ்பு அதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரியங்காவை சகோதரி என்று சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய ரேகா ஷர்மா 'ரெண்டு பேருக்கும் ஒரே அப்பாவா' என்று இழிவாகப் பேசுகிறார். ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடியவரே இப்படி பேசினால் மற்றவர்கள் எப்படி பேசுவார்கள்.