Skip to main content

3 ஆயிரம் கோடி வரை முதல்வர் எடப்பாடி குடும்பம் கொள்ளையடிக்கவுள்ளது – திருமாவளவன்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
thirumavalavan


சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச்சாலையை, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். அதிமுக அரசாங்கமும், மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசாங்கமும் சாலையை அமைத்தே தீருவது என்கிற முடிவில் பணியாற்றி வருகின்றனர். இந்த சாலை அமைவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 17ந்தேதி மாலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
 

 

 


திருமாவளவன் பேசும்போது, யாருக்காக இந்த எட்டுவழிச்சாலை?, 5 மாவட்ட மக்கள் யாரும் எட்டுவழிச்சாலை கேட்கவில்லை. மக்கள் கேட்காத போது இந்த சாலை போடப்படுவது கார்ப்பரேட்க்காக. இது கார்ப்பரேட் சாலை. இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ஒரு டோல்கேட் வரும் அளவுக்கு இதனை தனியார் பராமரிக்கப்போகிறார்கள். சென்னை டூ மதுரையோ, சென்னை டூ கன்னியாகுமரியோக்கோ இவ்வளவு பெரிய சாலை அமைக்காமல் சேலத்துக்கு அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன ?.
 


இது முழுக்க முழுக்க ஜிண்டால் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் சேலம் முதல் திருவண்ணாமலை வரையுள்ள மலைகளில் உள்ள கனிமவளங்களை வெட்டி எடுத்துச்செல்லவே இந்த சாலை போடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 20 சதவிதம் கமிஷன் என்றாலும் 3 ஆயிரம் கோடி வரை முதல்வர் எடப்பாடி குடும்பம் கொள்ளையடிக்கவுள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை கப்பல் வழியாக ஏற்றுதி செய்ய எண்ணூர் துறைமுகத்தை 50 ஆயிரம் கோடியில் மேம்படுத்தும் வேலைகள் நடைபெறவுள்ளன. கடலுக்கு அடியிலும் துறைமுகப்பணிகள் நடைபெறுகின்றன.
 


இந்த சாலை போடுவதற்கு பதில் கிராமப்புறங்களை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளோடு இணையுங்கள். நாட்டில் கிராமங்கள் சாலை வசதி கூட இல்லாமல் உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் சுடுகாட்டுப்பாதையில்லாமல் உள்ளன. அதை செய்யாத அரசு, மக்கள் கேட்காத இந்த சாலையை போடுகிறது.

 

 



இந்த சாலையை விடுதலை சிறுத்தைகள் ஏன் எதிர்க்கிறது எனக்கேட்கலாம். எங்கள் மக்களிடம் நிலங்களில்லை. ஆனால் நாங்கள் நிலம் வைத்திருப்பவர்களிடம் வேலை செய்கிறோம். நிலங்கள் இருந்தால் தானே வேலை செய்ய முடியும், எங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நிலமே இல்லாதபோது எங்களுக்கு எப்படி வேலை வழங்குவார்கள். அதனால் தான் எதிர்த்து போராடுகிறோம். இதன் மூலம் நாங்கள் எங்கள் மக்களுக்காக மட்டும் போராடவில்லை. நிலங்களை இழக்கும் பிற சாதி மக்களுக்காகவும் போராடுகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துக்கொண்டனர். கணிசமான அளவில் பெண்களும் பங்கேற்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.