Skip to main content

“எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார்...” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"The Chief Minister has done to our district what he has not done to any other district ..." - Minister I. Periyasamy

 

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாநகரில் உள்ள நாகல் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

 

இந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “திண்டுக்கல் மாநகருக்கு கடந்த கால திமுக ஆட்சியின் போது பணிகளைச் செய்திருக்கிறோம். அப்போது நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியிலுள்ள மேம்பாலத்தை தலைவர் கலைஞர் தான் திறந்து வைத்தார். அதுபோல் திருச்சி மேம்பாலத்தையும் தலைவர் ஆட்சியின் போது கட்டி திறக்கப்பட்டது. அதுபோல் தற்போது கிருஷ்ணாபுரத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை கூடிய விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நகரில் எங்கு பார்த்தாலும் தார் சாலைகள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

 

எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் ஸ்டாலின் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார். தமிழகத்திலேயே நம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ஐந்து கல்லூரிகளை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இப்படி நம் மாவட்டத்திற்கு 3000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் நகருக்கு மட்டும் மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த ரூ. 90 கோடி ஒதுக்கி இருக்கிறார். அதற்கான பணிகளும் தொடங்க இருக்கிறது.


மாநகர மேயர் இளம்மதி, துணை மேயர் ராஜப்பா தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரூ. 285 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 5000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கோடான கோடி பெண்கள் இலவசமாக பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறார்கள். தலைவர் ஆட்சியின்போது ஒரு பைசாகூட வாங்காமல் வேலைவாய்ப்பு வழங்கிய ஒரே மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் தான். அதே நிலைதான் தற்போது வரப்போகிறது எல்லாத் துறைகளிலும் உள்ள வேலைகள் வீடு தேடி கொடுக்கப்போகிற ஆட்சி தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி.


நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்தேன். அதுபோல் திண்டுக்கல்லிலும் கொடுத்திருக்கிறேன். தற்பொழுதும் கூட திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருக்கக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் கூடிய விரைவில் முதல்வரிடம் பேசி வீட்டு மனைப் பட்டா கொடுக்க வழி செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் என்ன பாடுபட்டது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாத் துறைகளிலும் தவறு செய்திருக்கிறார்கள். அதை கூடிய விரைவில் உணர்வார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது போல் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தலைவர் சொன்ன அனைத்து திட்டங்களையும் கூடிய விரைவில் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்