Skip to main content

“எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார்...” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"The Chief Minister has done to our district what he has not done to any other district ..." - Minister I. Periyasamy

 

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாநகரில் உள்ள நாகல் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

 

இந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “திண்டுக்கல் மாநகருக்கு கடந்த கால திமுக ஆட்சியின் போது பணிகளைச் செய்திருக்கிறோம். அப்போது நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியிலுள்ள மேம்பாலத்தை தலைவர் கலைஞர் தான் திறந்து வைத்தார். அதுபோல் திருச்சி மேம்பாலத்தையும் தலைவர் ஆட்சியின் போது கட்டி திறக்கப்பட்டது. அதுபோல் தற்போது கிருஷ்ணாபுரத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை கூடிய விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நகரில் எங்கு பார்த்தாலும் தார் சாலைகள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

 

எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் ஸ்டாலின் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார். தமிழகத்திலேயே நம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ஐந்து கல்லூரிகளை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இப்படி நம் மாவட்டத்திற்கு 3000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் நகருக்கு மட்டும் மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த ரூ. 90 கோடி ஒதுக்கி இருக்கிறார். அதற்கான பணிகளும் தொடங்க இருக்கிறது.


மாநகர மேயர் இளம்மதி, துணை மேயர் ராஜப்பா தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரூ. 285 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 5000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கோடான கோடி பெண்கள் இலவசமாக பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறார்கள். தலைவர் ஆட்சியின்போது ஒரு பைசாகூட வாங்காமல் வேலைவாய்ப்பு வழங்கிய ஒரே மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் தான். அதே நிலைதான் தற்போது வரப்போகிறது எல்லாத் துறைகளிலும் உள்ள வேலைகள் வீடு தேடி கொடுக்கப்போகிற ஆட்சி தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி.


நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்தேன். அதுபோல் திண்டுக்கல்லிலும் கொடுத்திருக்கிறேன். தற்பொழுதும் கூட திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருக்கக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் கூடிய விரைவில் முதல்வரிடம் பேசி வீட்டு மனைப் பட்டா கொடுக்க வழி செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் என்ன பாடுபட்டது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாத் துறைகளிலும் தவறு செய்திருக்கிறார்கள். அதை கூடிய விரைவில் உணர்வார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது போல் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தலைவர் சொன்ன அனைத்து திட்டங்களையும் கூடிய விரைவில் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.