Skip to main content

இஃப்தார் விருந்து குறித்து அவதூறு! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

இஃப்தார் விருந்து குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

RajaSingh

 

 

 

தெலுங்கானா மாநிலம் கோஷாமகால் தொகுதியைச் சேர்ந்தவர் ராஜா சிங். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர்போனவர். இஸ்லாமியர்கள் தங்களது புனித பண்டிகையான ரம்ஜானுக்காக நோன்பு கடைபிடித்து, ஒவ்வொரு நாளும் இஃப்தார் விருந்து வைப்பது வழக்கம். இந்த இஃப்தார் விருந்தை மதம் உள்ளிட்ட பிரிவினைகள் கடந்து பலரும் அனுசரித்து வருகின்றனர். 
 

இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. ராஜாசிங் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் தலைவர்கள்தான் இஃப்தார் விருந்தினை நடத்துகிறார்கள். அதனால், இதுபோன்ற விழாக்களில் நான் கலந்துகொள்வதில்லை. தெலுங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் இதுபோன்ற விருந்துகளில் பிஸியாக இருக்கின்றன’ என தெரிவித்தார். மேலும், குரான் பற்றி பேசிய அவர், ‘அந்த பச்சை புத்தகம் நாடு முழுவதும் தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை முழுவதுமாக தடை செய்யவேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார். 
 

 

 

இந்நிலையில், அவர்மீது ஃபலக்நாமா காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரம்ஜான் உணவுத் திருவிழாவுக்கு திடீர் போர்க்கொடி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
A sudden war flag for the Ramadan food festival at bangalore

வருகிற மார்ச் 12ஆம் தேதி இஸ்லாமியர்கள் பண்டிகையான ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதால், ஒவ்வொரு பகுதியிலும் ‘உணவுத் திருவிழா’வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர், பிரேசர் டவுனில் உள்ள எம்.எம்.ரோடு, மசூதி ரோடு மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ‘ரம்ஜான் உணவுத் திருவிழா’ என்பது வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த திருவிழாவின் போது, ரம்ஜான் காலத்தில் இஸ்லாமியர்கள்  அருந்தும் வெவ்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படும். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், இந்த உணவுத் திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.சி.சீனிவாடாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இதன் காரணமாக பிரேசர் டவுன் பகுதியில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த ஆண்டே, இந்த உணவுத் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கினோம். ஆனால், அதனையும் மீறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்த திருவிழாவின் போது ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க, ஆம்புலன்ஸ் வர முடியாத நிலைக்கு கூட்ட நெரிசல் இருந்தது. மேலும், இந்த திருவிழாவினால், குப்பை, புகை, கழிவுநீர் போன்ற சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு விற்பனை செய்யும் இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற முறையில் சமைக்கப்படுவதால், இதனை உண்ணும் மக்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே, ரம்ஜான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுன் பகுதியில் நடத்தக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய பண்டிகையான ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவுக்கு’ அங்கு உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.