Skip to main content

“பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர் கரு. பழனியப்பன்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

வரலாறு என்றாலே போர் அடிக்கிறது என்கின்ற காலம் மாறி. வேறு வழியின்றி வரலாறு கற்க வேண்டும் என்கின்ற காலமாக படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறது நமது இந்திய மக்களின் மனநிலை. காவிகளின் ஆதிக்கமும் அவர்களின் அடக்குமுறையும். சாதிய பாகுபாடும், மதம் ரீதியான வரலாற்று மற்றும் சித்தாந்த தாக்குதல்களுமே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இப்படியாக வரலாற்றை மீட்க வேண்டும் என்று பல தரப்பட்ட தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் புத்தகம் வாயிலாகவும், ஊடகம் வாயிலாகவும், வரலாறு சார்ந்த இடங்களுக்கு நேரில் சென்று படிப்பதுமென வரலாற்று கல்வி பணிகளை மேற்கொள்கின்றனர். அதன் பகுதியாக மதுரையை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான தி. லஜபதி ராய் அவர்கள் “நாடார் வரலாறு கருப்பா....காவிய....” என்கின்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்படக் கூடாது என்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. இறுதியில் மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.  இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சுப. உதயகுமார், இயக்குனர் அமீர் மற்றும் கரு. பழனியப்பன், பேராசிரியர் அ. மார்க்ஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

karupalaniappan director

இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்அடுத்ததாக பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் தனக்கான சீற்றம் பொருந்திய பேச்சினை கொண்டு மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் அவர் ”காவிகள் தொடர்பாக எப்போதெல்லாம் எங்கெல்லாம் சான்ஸ் கிடைக்கிதோ அப்போதெல்லாம் நான் மறக்காம பதிவு செஞ்சிடுவேன் ” என்று தொடக்கத்திலேயே தனது காவி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த இஷா யோகா மையத்தின் சிவ ராத்திரி குறித்து “எங்களை போன்ற சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களின் விழாக்களுக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படும் நிலையில், பல ஹெக்டேர் யானை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவா ராத்திரி நிகழ்ச்சிக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி வருகை தருகிறார்” மேலும் “இயற்கை பேரிடரை பார்வையிட வராத மோடி தேர்தல் நெருங்கும் வேலையில் மாசத்திற்கு இரண்டு முறை வருவது” ஏற்றுகொள்ள முடியாது என்றார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி குறித்து பேசிய அவர் “இந்து மத பிரதிநிதி என்று கூறும் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான். இப்போவே திவாலான மேலும் திவலாகக்கூடிய கம்பெனியில தெரிஞ்சே சீட்டு கட்டுவோமா. அதே தான் திரும்பவும் பி.ஜே.பி-க்கு வோட்டு போடாதிங்க, பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்” என்றார் அழுத்தமாக. “நமகெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் பி.ஜே.பி-லையும் இருக்காங்க, தமிழிசையும், பொன்னாரும். எப்போவுமே பொன்னார் சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆகா முடியாது. ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்” என்று தனது உரையை சாதிய எதிர்ப்புடன் முடித்துக்கொண்டார். 


தொடர்ந்து பேசிய பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் இயக்குனர் அமீர் “ மத வெறுப்பையும், மத வெறியையும் தூண்டும் இயக்கமே ஆர்.எஸ்.எஸ் அதனுடைய அஜெண்டாவிற்கு நம்மை அறியாமலேயே தள்ளப்படுகிறோம், மீண்டும் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்- இன் நோக்கம். அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதியையோ, வர்ணத்தையோ எதிர்கவில்லை” என்றார் மார்க்ஸ் தற்போதைய தி.மூ.க-வின் நிலை குறித்து கூறிய இயக்குனர் அமீர் “சமூக நீதியை வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்கு தி.மூ.க-விற்கு உள்ளது. சாதி இல்லை என்று பேசிய பெரியாரிசத்தின் கிளையான தி.மூ.க தொகுதிக்கான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் போது வேறு வழியின்றி சாதிவாரியான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது வருத்தமளிக்கிறது, வெளி நாடுகளில் இந்தியா காந்தியின் நாடு என்று தான் அறியப்படுகிறது. அனால் இங்கோ பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்கு 3000 கோடிக்கு சிலை வைக்கும் அவல நிலையில் இந்திய உள்ளது” என்றார் ஆதங்கத்துடன். மேலும் “காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும்” என்றார் அமீர் இறுதியாக நூலாசிரியர் தி. லஜபதி ராய் அவர்கள் தனது நூலை பற்றி பேசிவிட்டு “காவி வரலாறு அடிமைப்படுத்தும். அதனால் நம்முடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்று சுருக்கமாக முடித்துகொன்டார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தமிழ் சாரலோடு நிறைவுற்றது நிகழ்ச்சி 

- அஹமத்

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.