Skip to main content

இது இன்னொரு வியாபம்: பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

டெல்லியில் நான்காவது நாளாக பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வெழுதியவர்களும் மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

ProSSC

 

மத்திய அமைச்சரவை மற்றும் அதன் கீழுள்ள அமைப்புகளுக்கான நான் கெஜட்டட் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வுக்காக பிப்ரவரி 17 முதல் 21 வரை நான்கு தினங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 9000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான பணியாளர்களை இத்தேர்வு மூலம் தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் ஆதாரங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமெனவும் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். மாணவர்களின் கிளர்ச்சியை அடுத்து, 21-ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் அறிவித்தது.

 

இந்நிலையில் காங்கிரஸின் செய்தித் தொடர்பு பொறுப்பாளரான ரந்தீப் சுர்ஜீவாலா, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதோடு சி.பி.ஐ. விசாரணைக்கும் பா.ஜ. அரசு உத்தரவிடவேண்டுமென தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. அரசின் மற்றுமொரு வியாபம் ஊழல் என இதைக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமே தவிர, வேலைகளை விற்பனை செய்யக்கூடாதெனவும் விமர்சித்தார்.

 

மாணவர்களின் போராட்டத்தில் இன்று காலை அண்ணா ஹசாரேவும் கலந்துகொண்டதோடு, சி.பி.ஐ. விசாரணை தேவை என குரல்கொடுத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.