Skip to main content

“நூறே, நூறு பூத் தலைவர்களை அனுப்பி திமுகவை அசைத்து காட்டுகிறோம்..” - அண்ணாமலை

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Annamalai addressed press and spoke about temple matter
                                                           கோப்புப் படம் 

 

தமிழ்நாடு முழுக்க கரோனா காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை அனைத்து வழிப்பாட்டு தலங்களையும் மூடிவைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தினங்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தியும் நேற்றைய முன் தினம் (7ஆம் தேதி) தமிழ்நாடு முழுக்க 12 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

அதனைத் தொடர்ந்து இன்று பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “டிசம்பர் 31 வரை பண்டிகைகள் நடப்பதால் கூட்டங்களை கவனமாக அனுமதியுங்கள் என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. குறிப்பா டெஸ்ட் பாஸிட்டிவ் ரேட் (தொற்று பரவலின் எண்ணிக்கை) எங்கெல்லாம் 5 சதவீதத்திற்கு மேல் உள்ளதோ அங்கெல்லாம் கண்டிப்பாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். 5 சதவீதத்திற்கு கீழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தளர்த்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தர்மபுரியில் 2.48 சதவீதம் தொற்று பரவலின் எண்ணிக்கை இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் அதிகப்படியான சதவீதம். அதேபோல், சேலத்தில் 0.02% எனத் தொற்றுப் பரவலின் எண்ணிக்கை இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் குறைந்தபடியான சதவீதம். தமிழ்நாட்டில் அதிகளவில் இருப்பதே 2.48 சதவீதம்தான். இது மத்திய அரசு தெரிவித்துள்ள 5 சதவீதத்திற்குக் கீழ் உள்ளது. 

 

கோயில்களைத் திறக்க 10 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறோம். அமைச்சர் சொல்லியிருக்கிறார், ‘1000 பா.ஜ.க. வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது’ என்று; ‘நூறே, நூறு பூத் தலைவர்களை அனுப்புகிறோம்; திமுகவை அசைத்துக் காட்டுகிறோம்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.