Skip to main content

இரட்டை இலை சின்னத்தை வாங்கியது நாங்கதான்; பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Acquired the double leaf logo Nanga is the poster that caused the stir!

 

தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒற்றைத் தலைமை குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்களால் ஏற்பட்ட சர்ச்சைத் தொடர்ந்து வருகிறது. இருதரப்பு ஆதரவாளர்களும் தங்களுக்கு ஆதரவான கருத்துக்களை வைத்து போஸ்டர்களை ஒட்டி வருவதோடு, தாங்கள் எந்த பிரிவுக்கு ஆதரவு எனத் தெரிவித்து வந்த நிலையில் நேற்று (24/06/2022) திண்டுக்கல் மற்றும் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. சின்னாளபட்டி மாயத்தேவர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் எடப்பாடி ஆதரவாளர்களைக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

குறிப்பாக, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய ஆதரவு எடப்பாடியாருக்கு எனத் தெரிவித்த வந்த நிலையில் மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை பெயரில் அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்த எம்.பி.யுமான கே.மாயத்தேவர் பெயருடன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர், மாயத்தேவர், ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் வால்போஸ்டர்களை ஒட்டியிருப்பது நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Acquired the double leaf logo Nanga is the poster that caused the stir!

 

இது சம்மந்தமாக, போஸ்டர்களை ஒட்டிய சின்னாளபட்டி அருகே உள்ள எல்லப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறைத் தலைவர் ராஜேஷிடம் கேட்டபோது, "அ.தி.மு.க.வில் முதன்முதலில் போட்டியிட்டவர் சின்னாளபட்டி மாயத்தேவர். அவர் இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததால் தான் 1973- ஆம் ஆண்டு முதல் இன்று வரை இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் ஓ.பி.எஸ். சிறப்பாகத் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், குறுக்கு வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆகிவிட்டார். 

 

அவர் தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் கனவோடு அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார், ஒருநாளும் அது நடக்காது. இரட்டை இலை சின்னத்தை வேறு யாருக்கும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம். எடப்பாடி கையில் அ.தி.மு.க. போனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்சியாகி விடும் என்றதோடு, விரைவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஆசியுடன் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்று கூறினார்.

 

Acquired the double leaf logo Nanga is the poster that caused the stir!

 

 

இதுசம்மந்தமாக மாயத்தேவர் மகன் செந்திலிடம் கேட்டபோது, "ஆட்சித் திறமை, கட்சியை நடத்தும் நிர்வாகத்திறமை ஓ.பன்னீர்செல்வத்திற்கு உள்ளது. குறுக்கு வழியில் வந்த எடப்பாடிக்கு அந்த திறமை கிடையாது. பணத்தைக் கொடுத்து கட்சிக்காரர்களை வளைத்துள்ளார். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்டது. அவர் மீது வாட்டர்கேன்களை எரிந்துள்ளனர். ஒரு முன்னாள் முதல்வருக்கு அதே கட்சியின் பொதுக்குழுவில் இந்த நிலைமையா? முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? எடப்பாடி தலைமையில் கட்சி (அ.தி.மு.க.) செல்ல விடமாட்டோம். எங்கள் ஆதரவு இருந்தால் தான் அ.தி.மு.க. செயல்படும் என்ற நிலை விரைவில் தமிழ்நாட்டில் உருவாகும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்படுவார்" என்று கூறினார். 

 

இதுபோல தென்மாவட்டங்களான மதுரை, தேனி, உசிலம்பட்டி, மட்டப்பாறை, திருமங்கலம், கமுதி, பசும்பொன், சிவகங்கை உட்பட அனைத்து பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி எதிராக போஸ்டர்களை ஒட்டிவருவது அ.தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.