Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்; அடித்து ஆடிய 86 வயது பாட்டி! ஆட்டம் கண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

90 years old lady Perumathal won in local body election in sivanthipatti

 

பாளையை ஒட்டியுள்ள அதன் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி சிவந்திபட்டி. அடிப்படையிலிருந்து தற்போது வரையிலும் விவசாயத் தொழிலைக் கொண்ட கிராமம். இங்குள்ள விவசாய குடும்பமான சுப்பையா குடும்பம் சிவந்திபட்டி உட்பட சுற்றுப்பட்டுக் கிராமத்திலும் அறிமுகமானது. இவரது மனைவி தான் 86 வயதுடைய பெருமாத்தாள் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் இந்த மூதாட்டி பஞ்.தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பெண் வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

 

இந்தத் தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள் என்ற அளவிலான பெரியகுடும்பம் கணவர் காலமான பின்பும் விவசாயத் தொழிலைத் திறமையாகச் செய்து வந்திருக்கிறார் பெருமாத்தாள். இவரது மகன்களில் ஒருவரான தங்கப்பாண்டியன் தி.மு.க.வின் பாளை ஒன்றிய செயலாளர் அனைவரும் ஏகமாக சிவந்திபட்டியிலேயே குடியிருப்பவர்கள்.

 

இதன் பஞ்சாயத்துத் தலைவராகத் தங்கப்பாண்டியனின் மூத்த சகோதரர் இரண்டு முறையும் அடுத்துத் தங்கப்பாண்டியன் மூன்று முறையும் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் செய்தவர்கள் குறிப்பாகத் தங்கபாண்டியன் தன்னுடைய பதவிக் காலத்தில் ஊராட்சிப் பகுதிக்குத் தேவையான வீடு தோறும் குடிநீர் வசதி, கழிவுநீர் செல்லும் வாறுகால் சுகாதாரம், சாலை பேருந்து வசதி என அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததால் தலைவராகியிருக்கிறார்கள்.

 

90 years old lady Perumathal won in local body election in sivanthipatti

 

தற்போதைய நிலையில் சுமார் 2800 வாக்குகளைக் கொண்ட சிவந்திபட்டியின் தலைவர் பதவி பொது பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் இம்முறை இந்தக் குடும்பத்திலிருந்து 86 வயது மூதாட்டியும், தங்கபாண்டியனின் தாயாருமான பெருமாத்தாள் வேட்பாளராகியிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வராணி உமா இருவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 86 வயது என்றாலும் பெருமாத்தாள் இன்றளவும் தளர்ந்து விடவில்லை. ஆரம்பக்காலம் தொட்டே கால்நடையாகச் சென்று வயலில் வேலை செய்து விட்டு பொழுது அடங்க வீடு திரும்பும் பெருமாத்தாள் திடகார்த்தமாகவே இருக்கிறார். தனியாகவே விவசாயப் பணிகளைச் செய்கிறார். அதனால் இன்று வரை தெம்பும் ஆரோக்கியமுமாக இருக்கிறார்.

 

தன் குடும்பத்தாருடன் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டார். “எம் புள்ளைக பிரசிடெண்ட்டாயிருக்கும் போது ரோடு, பஸ்சு, குடிதண்ணி வசதி கொண்டாந்தாங்க. அதுமாதிரி நான் ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடுப்பேன்” என்று திடமாகப் பேசி வாக்கு சேகரித்தார். அனைவரும் தெரிந்த பழகியவர்கள், என்பதால் தினமும் காலை, மாலை எனச் சளைக்காமல் சென்று வாக்கு சேகரித்தார். விளைவு வெற்றி பெருமாத்தாளுக்குச் சாதகமாகியிருக்கிறது. 2160 வாக்குகள் பதிவானதில் பெருமாத்தாள் 1568 வாக்குகள் பெற்று வெற்றி பெற எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட்டை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக இதன் ஊராட்சிக்குட்பட்ட 342 வாக்குகளைக் கொண்ட பற்பநாதபுரம் கிராமத்தின் 310 வாக்குகள் பெருமாத்தாளுக்கு கிடைத்திருக்கிறது.

 

ad

 

இதுகுறித்து பெருமாத்தாள் கூறுகையில், “எங்க ஊர்ல எல்லா சனங்களும் வித்தியாசமில்லாம உறவு முறைய வச்சுப் பழகுவோம்யா. ஒத்துமையா இருப்போம். இங்க உள்ள எல்லாக் குடும்பங்களுக்கும் நான் போய் வந்து பழகியிருக்கேன். என்னையத் தெரியாதவங்களே இல்ல. எம் புள்ளைக நம்ம ஊருக்கு என்ன செஞ்சாங்களோ அதப்போல ஒரு குறையுமில்லாம நான் செய்வேன்னு மக்க கிட்டச் சொல்லி வோட்டு கேட்டேன். என்னைய நம்பி வோட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிறுக்காக. அதுக்கு நா, விசுவாசமாயிருப்பேம்யா” என்கிறார் பெருமாத்தாள் தெம்பாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.