Skip to main content

2021 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி விவரங்கள்!

Published on 16/03/2021 | Edited on 03/04/2021

 

2021 TamilNadu assembly election full detail

 

தமிழகத்திற்கான 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது. தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் மீது மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை நடைபெறுவதோடு, வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே. 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.  

 

இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. யார் தலைமையில் கூட்டணி. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன எனும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. 

 

திமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 

 

2021 TamilNadu assembly election full detail

 

திமுக  173
காங்கிரஸ் 25 
சி.பி.ஐ 6
சி.பி.எம். 6
விசிக 6
மதிமுக 6
கொ.ம.தே.க. 3
இ.யூ.மு.லீக். 3
ம.ம.க 2
ஃபார்வார்ட் பிளாக் 1 
தமிழக வாழ்வு உரிமை 1 
மக்கள் விடுதலை கட்சி 1 
ஆதித்தமிழர் பேரவை  1


அதிமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி

 

2021 TamilNadu assembly election full detail


அதிமுக  179
பாட்டாளி மக்கள் கட்சி 23 
பாரதிய ஜனதா கட்சி 20
தமிழ் மாநில காங்கிரசு 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1
புரட்சி பாரதம் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
பசும்பொன் தேசிய கழகம் 1


மநீம தலைமை: முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

 

2021 TamilNadu assembly election full detail

 

மநீம 144
ஐ.ஜே.க 40
சமக 37
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10
தமிழ்நாடு இளைஞர் கட்சி 3


அமமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்

 

2021 TamilNadu assembly election full detail

 

அமமுக 161
தேமுதிக 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3
கோகுல மக்கள் கட்சி 1 
மருது சேனை சங்கம் 1 
விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1 
மக்கள் அரசு கட்சி 1 
 

நாம் தமிழர்: முதல்வர் வேட்பாளர் சீமான்

 

2021 TamilNadu assembly election full detail

 

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

 

 

திமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்   

 

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

 

சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர்கள் பட்டியல்!

 

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பட்டியல்

 

விசிக வேட்பாளர் பட்டியல் 

 

திமுக கூட்டணியில் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்

 

பாமக வேட்பாளர்கள் பட்டியல்


 பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

 

த.மா.கா. மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

 


அமமுக வேட்பாளர் பட்டியல் 


தேமுதிக வேட்பாளர் பட்டியல்
 

 

 

மநீம வேட்பாளர்கள் பட்டியல்

 


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல்

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.