Skip to main content

நீட் தேர்வுக்கு எதிராக தனிநபர் மசோதா! ராஜ்யசபாவில் வில்சன் எம்.பி. தாக்கல்! 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Individual bill  Filed against NEET exam! Wilson MP in the Rajya Sabha.

 

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் இன்னமும் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் கவர்னரைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மசோதாவுக்கு ஒப்புதலளித்து ஜனாதிபதிக்கு விரைந்து அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவைக் கிடப்பிலேயே வைத்திருக்கிறார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி.

 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்படி ராஜ்யசபாவில் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார் திமுக எம்.பி.யான வழக்கறிஞர் வில்சன். இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.பி. வில்சன், “தமிழகத்திலுள்ள மாணவ, மாணவிகளின் டாக்டர் கனவைச் சிதைக்கும் வகையில் 2016இல் கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. 

 

நீட் தேர்வினால் 17 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நீட் தேர்வினை எதிர்த்து திமுக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு ராஜ்யசபாவில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து நீட் தேர்வை விரட்டியடிக்க வேண்டுமென்பதுதான் திமுகவின் ஒரே நோக்கம்.

 

சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்படி இருக்கிறார். தமிழகத்திலிருந்து ஒரு டாக்டர் கூட உருவாகிவிடக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு இருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தனிநபர் மசோதா மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழகத்தில் அமைப்பது தொடர்பான தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்திருக்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது