Skip to main content

ஆட்சியில் உள்ள முதல்வரை இறந்தார் என காட்டும் விக்கிபீடியா!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
manoharparrikar

 

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் முதலமைச்சராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். இவர் இறந்த நாள் இன்று என விக்கிபீடியா வின் மாதந்திர நாள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார் மனோகர்பாரிக்கர். 2017ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார். குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார்.


 

wiki



இந்நிலையில் விக்கிபீடியாவின் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்று மார்ச் 14ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தினத்தை பற்றிய தகவல்களை விக்கிபீடியா வழங்கும். அதன்படி இன்று உலகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், உலகத்தில் முக்கியமானவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். இறந்தவர்கள் வரிசையில் 1955ல் மனோகர்பாரிக்கர் – இந்திய அரசியல்வாதி, கோவா முதல்வர் என வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பெயரை க்ளிக் செய்து உள்ளே சென்றால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1955 டிசம்பர் 13ந்தேதி பிறந்தார் என்றும், அவரது அரசியல், குடும்பம் பற்றிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன. அவர் இறந்த ஆண்டு பற்றிய குறிப்பு அதில்யில்லை என்பது குறிப்பிடதக்கது. தவறுதலாக பதிவானதா அல்லது திட்டமிட்டே யாராவது அப்படி உருவாக்கினார்களா என்பது தெரியவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.