Skip to main content

நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகும் ட்விட்டர் நிறுவனத்தின் உலக துணை தலைவர்...

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவரும் உலக  துணை தலைவர் பொறுப்பிலும் உள்ள காலின் குரோவல் வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

twitter

 

சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ட்விட்டர் நிர்வாகத்திற்கும் சம்மன் ஒன்றினை அனுப்பியிருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றையதினம் திட்டமிட்டபடி கூட்டமும் நடந்தது. ஆனால் அதில் ட்வீட்டர் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அப்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நாடாளுமன்ற குழு முன் நேரில் ஆஜராக முடியாது எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையில் ட்விட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானம் நிறைவேற்றியது. இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வரும் திங்கட்கிழமை ட்விட்டர் உலக துணைத் தலைவர் காலின் குரோவல் ஆஜராகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டரின் அதிகாரிகளை அழைத்தற்கு நன்றி. உலக நாடுகளின் தேர்தலின் போது கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளைதான் இந்திய தேர்தலின்போதும் கடைபிடிக்க போகிறோம். அதன்படி ஒரு பிரத்யேக தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு ட்விட்டுகள் ட்ரெண்ட் ஆவதை கட்டுப்படுத்த உள்ளோம். அத்துடன் தவறான செய்திகளை பரப்புவர்களையும் கண்டறிய உள்ளோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரின் உலக  துணை தலைவர் பொறுப்பிலுள்ள காலின் குரோவல், “2019ல் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் எங்களது நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. ஒவ்வொரு நாட்டின் பொது தேர்தல்களிலிருந்து ட்விட்டர் நிறுவனம் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு வருகிறது. அந்தவகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்..

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.