Skip to main content

இந்தியா, வங்கதேசம் இடையே மீண்டும் இன்று தொடங்குகிறது ரயில் சேவை! 

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Train service between India and Bangladesh resumes today!

 

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (29/05/2022) மீண்டும் ரயில் சேவை தொடங்குகிறது. 

 

கரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்கதேசத்தில் உள்ள  நகரங்கள் இடையேயான ரயில் சேவை கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால், ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. 

 

அதன்படி, வங்கதேசத்தில் இருந்து டாக்கா, மைத்திரி, கொல்கத்தா எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து குணாவந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (29/05/2022) முதல் இயக்கப்படவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போலீசை டார்லிங்னு கூப்பிட்ட போதை ஆசாமி” - நீதிமன்றம் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Kolkata court takes action Calling women 'darling' is a crime

கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.  

Next Story

“அரசியலில் ஈடுபடுவேன்” - உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு!

Published on 03/03/2024 | Edited on 04/03/2024
I will be involved in politics High Court judge announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடப்போவதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அறிவித்துள்ளார். நாளை (04.03.2024) தனது கடைசி பணி நாளாக இருக்கும் என நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நாளை மறுநாள் (05.03.2024) அனுப்ப உள்ளதாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று தன்னை பலமுறை திரிணாமுல் காங்கிரஸ் சவாலுக்கு அழைத்துள்ளனர். இந்த சவாலையடுத்து நான் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது என நினைத்ததாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய தெரிவித்துள்ளார்.

நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசியலில் ஈடுபடப்போவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பரபரப்பு தகவலைத் தெரிவித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.