Skip to main content

அடேங்கப்பா இப்படியும் ஒரு வழிப்பறியா... வாயைப் பிளக்க வைக்கும் ஃபாஸ்டாக் மோசடி!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

PP

 

மகாராஷ்டிராவின் புறநகர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் சிக்னலுக்காக கார் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கார் நின்று கொண்டிருந்த பொழுது காரின் கண்ணாடியை மிகவும் அக்கறையுடன் சிறுவன் ஒருவன் துடைத்தான். அதன்பிறகு அந்த சிறுவனுக்கு காரில் இருந்த இரு இளைஞர்களும் 'டிப்ஸ்' கொடுத்துள்ளனர். அதன்பின் உடனடியாக கார் சிக்னலில் இருந்து புறப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரு இளைஞர்களும் காருக்காக வைக்கப்பட்டிருந்த 'ஃபாஸ்டாக்' வங்கி கணக்கை சோதனை செய்தபோது பணம் முழுவதும் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த ஒரு சுங்கச்சாவடியையும் கடக்காத நிலையில் எப்படி 'ஃபாஸ்டாக்' கணக்கில் உள்ள பணம் திருடுபோய் இருக்கும் என குழம்பி தவித்த அந்த இரு இளைஞர்களும் சிக்னலை கடந்த நேரத்தில்தான் பணம் காணாமல் போயுள்ளது என்பதை யூகித்தனர்.  

 

PP

 

இதற்காக காத்திருந்த அந்த இளைஞர்கள் இரு வாரம் கழித்து அதே சிக்னலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுதும் சிக்னலுக்காக கார் காத்திருந்த பொழுது மற்றொரு சிறுவன் அதேபோல் காரின் முகப்பு கண்ணாடியை மிகவும் அக்கறையுடன் துடைப்பது போல் துடைத்தான். அப்பொழுது கூர்ந்து கவனித்தபோது அச்சிறுவனின் கையிலிருந்த டிஜிட்டல் வாட்ச் போன்ற பொருள் கார்  கண்ணாடியின் மீது ஒட்டப்பட்டிருந்த 'ஃபாஸ்டாக்' ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதையும் அதிலிருந்து சிவப்பு நிற ஒளி வெளியாவதைக் கண்டு அதிர்ந்த இளைஞர்கள், அந்த சிறுவனை கூப்பிட்டு டிப்ஸ் தருவதாகக் கூறினர். அருகே வந்த சிறுவனிடம் 'இது என்ன ஸ்மார்ட் வாட்சா? என்ன விலை' என்று கேட்டதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். இந்த மொத்த நிகழ்வுகளையும் இந்த இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்படி ஒரு நூதனமான முறையில்  'ஃபாஸ்டாக்' கணக்கிலிருந்து பணம் திருடுவது தொடர்பான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

பா.ஜ.க. கூட்டணியில் மோதல்?; அஜித்பவார் எச்சரிக்கை!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
BJP Conflict in alliances?; Ajitpawar alert

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இத்தகைய சூழலில் நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாராமதி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் இருந்துகொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.