மூத்த பத்திரிகையாளரான குல்தீப் நய்யார் நேற்று இரவு காலமானார்.
1924-ஆம் ஆண்டு பஞ்சாப் அருகே சியால்கோட் பகுதியில் பிறந்த குல்தீப், பத்திரிகையாளர்,மாநிலங்களவை உறுப்பினர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தவர். அதேபோல் அவர் ஐ.நாவின் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். நேருவுக்கு பிறகு, தீர்ப்பு போன்ற புத்தகங்கள் மூலம் எழுத்தில் ஆளுமை படைத்தவராக விளங்கிய அவர் தற்போது உடல்நலம் குன்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 95.