Skip to main content

மே 2- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Prime Minister Narendra Modi to tour abroad on May 2

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும் மே 2- ஆம் தேதி ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

 

பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முதற்கட்டமாக, வரும் மே 2- ஆம் தேதி அன்று ஜெர்மனிக்கு செல்கிறார். அப்போது ஜெர்மன் பிரதமர் உலஃப் ஷோல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தோ- ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைத் திட்டத்தின் ஆறாவது அமர்வில் இரு தலைவர்களும் பேச உள்ளனர். 

 

இச்சந்திப்பில், இரு நாடுகளில் இருந்தும் சில அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் இரு தலைவர்களும் கலந்துக் கொண்டு பேச உள்ளனர். ஜெர்மனியைத் தொடர்ந்து, டென்மார்க் செல்லும் பிரதமர், அங்கு அந்நாட்டு பிரதமர் ஃப்ரெடரிக்செனைச் சந்தித்துப் பேசவுள்ளார். அதைத் தொடர்ந்து, கோபன்ஹேகனில் நடைபெறும் இந்தோ நார்டிக் நாடுகளின் கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

 

பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரான்ஸுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசவுள்ளார். 2022- ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

 

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் 113 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பதும், இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.    

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.