ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "2021 நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். ஆங்கில புத்தாண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.