Skip to main content

'நீட்' தேர்வு வழக்கு - சி.பி.எஸ்.இ (CBSE) மாணவர்கள் மனு தள்ளுபடி 

Published on 24/02/2018 | Edited on 24/02/2018

நீட் தேர்வில் வயது வரம்பைத் தளர்த்த வேண்டுமென சி.பி.எஸ்.இ (CBSE) பாடத்திட்டத்தில் படித்த பொதுப்பிரிவு மாணவர்கள் சி.பி.எஸ்.இ (CBSE) வரையறுத்த வயது வரம்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

CBSE


நேற்று (23 பிப்ரவரி) விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ (CBSE) வரையறையின் படி நீட் தேர்வு எழுதும் மாணவரின் 17 முடிந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது பொது பிரிவினருக்கு 25, பட்டியலினத்தவருக்கு 30 என வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 8-ஆம் தேதி முதல் வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 3-வது வாரத்தில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வயது வரம்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும். அதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ (CBSE) வரையறை செய்துள்ள வயது வரம்பு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, அதை மாற்ற முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

புத்தகங்களைப் பார்த்து எழுதும் தேர்வு; விரைவில் அமல்படுத்த திட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Plan to implement soon on open book examination

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு. தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. 

பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின்படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.