Skip to main content

“முதல்வர் வரை சென்றும் பலனில்லை... மீடியா வெளி உலகிற்கு தெரியவைத்தது”-முடிவுக்கு வந்த தாயின் பாசப்போராட்டம்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Mother's affectionate struggle that came to an end

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் இந்திய மாணவா் கூட்டமைப்பின் (எஸ்எஃப்ஐ) முன்னாள் நிர்வாகியான அனுபமா சந்திரன். இவரின் தந்தை ஜெயச்சந்திரன் வங்கி அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.  இவர் சிபிஎம் கட்சியிலும் முக்கியப் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில், அனுபமாவுக்கும் DYFI நிர்வாகியான அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமாருக்கு திருமணமாகி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அனுபமாவுடன் அஜித்துக்கு காதல் மலர்ந்தது. விவாகரத்து கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால், அஜித் விவாகரத்துப் பெறுவதற்கு முன்னர் அனுபமா கர்ப்பம் ஆகியுள்ளார்.

 

இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அனுபமா. குழந்தை சுமார் 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்துள்ளது. அஜித்குமாருடன் பழகி வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே அனுபமாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. காரணம், அஜித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அனுபமா ஆதிக்க சாதியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுபமா ஆண் குழந்தைக்கு தாயாகிவிட, அவரை சந்திக்க வந்தனர் அனுபமாவின் குடும்பத்தினர். சரியாக குழந்தை பிறந்த மூன்றாவது நாள், அனுபமா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சமயம் அது. அப்போது அனுபமாவை சந்தித்த அவரின் பெற்றோர், அன்பாகப் பேசி ஆறுதல் சொல்லியுள்ளனர்.

 

அனுபமாவிடம், "உனக்கு கல்யாண வயதில் ஒரு அக்கா இருக்கிறாள். நீ வீட்டில் இருந்தால் இந்தக் குழந்தையும் அங்குதான் வளரும்படி இருக்கும். இந்தக் குழந்தையைப் பார்க்கும் யாரும் உன் சகோதரியை கல்யாணம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள். நீ செய்த தவறால் அவளும் பாதிக்கும் நிலைமை ஏற்படக்கூடும். அதனால், சில காலம், உன் நண்பர் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் தேவையற்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உன் சகோதரியின் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் குழந்தையைக் கொண்டுவந்து உன்னிடமே ஒப்படைத்து விடுகிறோம்" எனக் கனிவான குரலில் கூறியுள்ளனர்.

 

இதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளாத அனுபமா குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும், அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக குழந்தையை அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, அவரது பெற்றோருடன் தொடர்ந்து பேசிவந்த அனுபமா, 'என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள்' எனக் கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர், 'உன் குழந்தை பத்திரமாக இருக்கிறது. அக்காவோட கல்யாணம் முடிந்ததும் கொண்டுவந்து தருகிறோம்' என நம்பிக்கை சொல்லியுள்ளனர். காலம் உருண்டோட, அனுபமாவின் அக்காவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால், அக்காவின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அனுபமாவின் பெற்றோர், குழந்தையை கொடுப்பதாய் தெரியவில்லை.

 

குழந்தையைத் தன்னிடம் கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறிய அனுபமா, அஜித்துடன் வசித்திருக்கிறார். இந்நிலையில், குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, அருகில் உள்ள பேரூர்கடை காவல் நிலையத்தில் அனுபமா புகார் அளித்தார். அனால், புகார் குறித்த எந்த நடவடிக்கை இல்லை. சுமார் ஆறு மாதங்களாக அதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரை பலரிடமும் மனு கொடுத்துள்ளார். அதிலும், எந்தப் பலனும் இல்லை. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், மீடியாவின் கதவுகளை தட்டினார் அனுபமா. மீடியாவில் அனுபமாவை பற்றிய செய்திகள் வெளிவந்ததும், அனுபமாவின் போராட்டம் வெளி உலகிற்குத் தெரியவந்தது.

 

இதையடுத்து, அனுபமாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவர்களை கைது செய்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றதும் போலீசும் தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போதுதான், அனுபமாவின் பெற்றோர், மாநில அரசின் மையத்தில் குழந்தையைத் தத்துக் கொடுப்பதற்காக ஒப்படைத்தது தெரியவந்தது. இதனிடையே, ஆந்திராவில் உள்ள ஒரு தம்பதிக்கு அனுபமாவின் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. உடனே, ஆந்திரா விரைந்த கேரள போலீசார், குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்டுக் கொண்டு வந்தனர்.

 

பின்னர், அனுபமா, அஜித் மற்றும் குழந்தை ஆகியோரது டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்தக் குழந்தை அனுபமா மற்றும் அஜித்துக்கு பிறந்த குழந்தைதான் என்பது உறுதியானது. இதன்பிறகு, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க இருப்பதாக குழந்தைகள் நலக் குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன்படி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது அனுபமாவின் குழந்தை. பிறகு, அனுபமா-அஜித் தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம், அனுபமா நடத்திவந்த ஒரு ஆண்டு பாசப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.