Skip to main content

பிணவறைக்குள் ஒரு புத்தக காதலன்! அமைச்சரை வியக்கவைத்த மருத்துவ ஊழியர்

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கக் கூடிய பழக்கம் என்பது முற்றிலும் குறைந்துள்ளது. முழுமையான எழுத்தறிவு கொண்ட கேரளாவில் கூட புத்தகங்களை விட்டுட்டு செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையை நூலகமாக மாற்றியுள்ளார் அதன் ஊழியரான ஜெயக்குமார்.

 

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரேதப் பரிசோதனை அறையில் ஃபாரின்ஸிக் மருத்துவ அறிவியல் ஜுனியர் லேப் அலுவலராக, மணிகண்டேஸ்வரம் போற்றி கோணத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (53) பணிபுரிந்து வருகிறார். 4 அறைகளை கொண்ட அங்கு ஒரு அறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஜெயக்குமார் வாங்கி வைத்துள்ளார். 

 

விபத்தில் பலியானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் பிணங்களை வைத்திருக்கும் இங்கு ஒரு மினி நூலகத்தை ஜெயக்குமார் உருவாக்கி வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “11ம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் வாசிக்கும் எண்ணம் என்னை தூண்டியது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து வருகிறேன். ஒரு நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தை வீணடிக்காமல் 10 வரிகளாவது படித்து விடுவேன். இதனால் எப்போதும் என்னுடன் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும்.

 

அந்த பழக்கத்தில் தான், நான் வேலை செய்கிற பிணவறையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக ஒன்றிரண்டு என வாங்கி தற்போது அது 100க்கும் மேற்பட்ட புத்தகங்களாக உள்ளன. நான் வாசிப்பதை பார்த்து, பல மருத்துவா்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் நேரம் கிடைக்கும் போது வந்து வாசிக்கிறார்கள். மேலும் என்னுடைய வீட்டில் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

 

இதற்கு முன் கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்த்த போது அங்கேயும் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எனக்கு புத்தகம் தான் மனைவி பிள்ளைகள் என நேசிக்கிறேன். என்னுடைய இறுதி மூச்சு விடும் வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 1945-ல் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் உள்ளூர் பரமேஸ்வரன் ஐயர் எழுதிய புத்தகம் முதல், தற்போதைய கேரளா அரசு செயலாளர் சிவசங்கர் (தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கூட்டாளியாக இருந்தவர் என குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்) எழுதிய ‘அசுத்தா மாவு வெறும் ஒரு ஆண’ என்ற புத்தகம் வரை வாசித்து விட்டேன்.

 

இங்கு நான் புத்தகம் வைத்திருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி அங்கு வரும் போது நேரிடையாக வந்து பார்க்கிறேன் என்றார். இளைய தலைமுறையினரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை விட்டுட்டு, புத்தகம் வாசிப்பதில் கொஞ்சம் அக்கரையை செலுத்த வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.