Skip to main content

கொள்ளையடிக்க காரில் சென்ற கும்பல்;5பேருடன் ஆயுதங்கள் பறிமுதல்!

Published on 12/12/2018 | Edited on 13/12/2018

புதுச்சேரி  வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ஜிந்தா கோதண்டராமன்  போலீசாரை தீவிரமாக ரோந்து சென்று குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து வடக்கு பகுதிக்கு உட்பட்ட போலீசார்கள் அனைவரும் தினமும் தீவிர ரோந்து சென்று வந்தனர். 

 

இந்த நிலையில் வடக்குபகுதி எஸ்.பி. தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு  காரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களும்  மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் தலைமையிலான குற்றப்பிரிவு போலிசாரும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் மேட்டுப்பாளையம் வழியாக வருவதாக அறிந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு மேட்டுப்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் அதேபகுதியில் நின்ற மற்ற போலீசார் தங்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தினர். இதையடுத்து அந்த கார் நின்றது. உடனே போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். 

 

police

 

காரினுள் 5 பேர் இருந்தனர். காரை சோதனை செய்தபோது கத்தி மற்றும் இரும்பு ராடுகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும், காரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சண்முகபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த மார்ட்டின்(26), சுரேஷ்(24), வாணரபேட்டையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(25), மூலங்குளம் மோதிலால் நகரை சேர்ந்த தமிழ்வாணன்(26), வில்லியனூர் மணவெளி பாலாஜி நகரை சேர்ந்த மாணிக்கம்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஜ.ஆர்.பி.என். போலீஸ் கோபி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராமுவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. அனைவரும் கூட்டாக கொள்ளையடிக்கும் நோக்கில் காரில் சுற்றியதும் தெரியவந்தது. 

 

 

இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கத்தி, 3 இரும்பு ராடுகள், 5 செல்போன்கள், அவர்கள் ஓட்டி வந்த கார், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மார்ட்டின் மீது ஜ.ஆர்.பி.என். கோபி  கொலை வழக்கும் தற்போது அவன்மீது பிடிவாரண்டும் உள்ளது.  ஸ்டீபன் ராஜ், தமிழ்வாணன் ஆகிய இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. 

 

கொள்ளை நடக்கும் முன்பே  குற்றவாளிகளை பிடித்த போலீசாரை வடக்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.