Skip to main content

66ஏ பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் - மத்திய உள்துறை கடிதம்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

ministry of home affairs wrote letter for state and union government

 

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000- ன் (Information Technology Act, 2000) ரத்து செய்யப்பட்ட பிரிவு 66ஏ- ன் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. 

 

அந்த கடிதத்தில், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் 66ஏ- ன் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிடுமாறும், 66ஏ பிரிவில் எதாவது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

'Y' section security for BJP state president Annamalai!

 

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, நுண்ணறிவுப் பிரிவுத் துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய துணை ராணுவப் படையினர் என்றழைக்கப்படும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு கமாண்டோ வீரர்கள் உள்பட 11 பேர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல் கூறுகின்றன. 

 

ஏற்கனவே, அண்ணாமலைக்கு தமிழக அரசால் 'Y+' பிரிவுப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக 'X' பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை தனது ஆட்சேபத்தைத் தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.