Skip to main content

ஏறுது பெட்ரோல் விலை... மாருதியின் புது அறிவிப்பு!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

 

suzuki

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல்  மாசு, இதனை எல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது முதல் பேட்டரி காரை வரும் அக்டோபர் மாதம் சாலை முன்னோட்டம் செய்ய உள்ளது. 2020-ஆம் ஆண்டு முதல் பேட்டரி கார்களை இந்திய சந்தையில் டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் துணையுடன் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாய் குஜராத்தில் உள்ள ஹன்ஸல்பூரில் மாருதி நிறுவனத்தின் உதிரி பாகங்கள் பொருத்தும் இடத்தில் 'லித்தியம்-அயன் பேட்டரி' (lithium-ion battery) உற்பத்தியும் 2020-ஆம் ஆண்டு முதல் தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நேரத்தில் மாருதியின் இந்த அறிவிப்பு கார் பயன்படுத்துபவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

நான்கு மாதங்களில் இரண்டு முறை உயர்ந்த கார்களின் விலை..! காரணம் என்ன..?

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Maruti Suzuki car prices rose

 

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, நான்கு மாதங்களுக்குள் தனது நிறுவனத்தின் கார்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. மாருதி ஆல்டோ துவங்கி, மாருதி கிராண்ட் விட்டாரா வரை மொத்தம் 15 மாடல் கார்களை மாருதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துவக்க மாடலான மாருதி சுசூகியின் விலை 3 முதல் 4.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் உயர்தர காரான மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் விலை 24.5 இலட்சமாக உள்ளது. 

 

இந்நிலையில், இந்நிறுவனங்களின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை 1.6% அதாவது 22 ஆயிரம் வரை உயர்த்தப்படுவதாக மாருதி அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாடல்களின் விலை உயர்கிறது என்பதை சரியாக குறிப்பிடவில்லை. கார் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தினால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கார் உற்பத்தி தொழிற்சாலையை இரண்டு நாட்களுக்கு மூடுவதாக அறிவித்த 'மாருதி' நிறுவனம்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் விற்பனை சரிவால், வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதனை சார்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், விடுமுறையை அறிவித்தும் வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 

ECONOMIC SHUTDOWN REFLECTED MARUTI SUZUKI ANNOUNCED PRODUCTION STOP

இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மாருதி நிறுவனம் இரண்டு நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் குருகிராம், மானேசர் ஆகிய இரு இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி, செப்டம்பர் 9 ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு மூடப்படும் என்றும், உற்பத்தி இருக்காது என்றும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

ECONOMIC SHUTDOWN REFLECTED MARUTI SUZUKI ANNOUNCED PRODUCTION STOP


ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 34% அளவுக்கு விற்பனை சரிந்ததால், இத்தகைய நடவடிக்கையை மாருதி நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள மாருதி நிறுவனத்தின் கார்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.