Published on 21/10/2021 | Edited on 21/10/2021

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி 11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு தொடர்ந்து தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், நேற்று 11 11,079 பேருக்கு கரோனா உறுதியானது
இந்தநிலையில் இன்று மீண்டும் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,733 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதுடன், கரோனாவில் பாதிக்கப்பட்ட 118 இறந்துள்ளனர். அதேநேரத்தில் 9,855 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.