கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி இருந்த பாதிரியார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம். பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் 2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் 14 சந்தர்ப்பங்களில் தங்களை மிரட்டி வன்புணர்வு செய்ததாக அவர்மீது கன்னியாஸ்திரிகள் குற்றச்சாட்டு தெரிவித்து புகாரளித்திருந்தனர். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிரான்கோ முலக்கல் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கேரளாவின் கோட்டயம் நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.