Skip to main content

லேட்டஸ்ட் ஹைடெக் கஞ்சா கடத்தல்.. அதிர்ச்சியில் உறைந்து போன கேரள காவல்துறை! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

கடத்தல் பஜாரில் இது புதுசு என்பதால் ஹைடெக் டெக்னிக்கல் முறையான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார். மேலும், இதனைக் கண்டு பிடிக்க மூளையைக் கசக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சரியமும் அதிசயமுமாய்.

 

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. இரண்டு எல்லைப் புறங்களிலும் தமிழக கேரள அரசுகளின் தலா மூன்று சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த எல்லைப் புறங்களை அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு மாநில வாகனங்களும் கடந்து செல்கின்றன. குறிப்பாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குத் தேவையான உள்ளங்கால் முதல் உச்சி வரையிலான பொருட்கள் வாகனங்களில் செல்கின்றன. இதில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களும் கடத்தப்படுவதுண்டு. பலதுகள் தப்பித்தாலும் சிலதுகள் சிக்குவதுண்டு.

 

இந்த நிலையில், கேரளாவின் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான கே.பி.ரவிக்கு தமிழகம் வழியாக கேரளாவின் ஆரியங்காவுப் பாதையில் வருகிற கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுகிறது எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலர்ட் ஆன எஸ்.பி. தனது க்ரைம் ஸ்குவார்டான டி.ஒய்.எஸ்.பி. அசோக்குமார், புனலூர் டி.ஒய்.எஸ்.பி. வினோத்குமார், தென்மலை எஸ்.ஐ.சாலு உள்ளிட்ட போலீஸ் டீமை அனுப்புகிறார்.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

இந்த டீம் தமிழக புளியரை எல்லையிலிருக்கும் கேரளாவின் ஆரியங்காவு கோட்டை வாசல் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கண்காணிப்பிலிருந்திருக்கிறார்கள். மாலை சுமார் 6 மணிக்கு மேல் எல்லையைக் கடந்த ஆந்திரப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மடக்கிய டி.ஒய்.எஸ்.பி. அதிலிருந்த இருவரையும் விசாரித்திருக்கிறார். தங்களுக்குத் தமிழும் மலையாளமும் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும், சபரிமலை போவதாகவும் அவர்கள்  தெரிவித்திருக்கின்றனர்.

 

சபரிமலைக்குச் செல்வதாகத் தெரிவித்த அவர்கள், மாலை அணியாமல் சாதாரண உடையில் அவர்களிருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் அந்தக் காரின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஸ்கேன் செய்தும் சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. சலித்துப்போன டி.ஒய்.எஸ்.பி. தற்செயலாகக் காரின் டோரைத் திறந்த போது அதன் உட்புறம் ஒன்றின் ஷீட் சமமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருப்பது தெரிய, சந்தேகப்பட்ட அவர் அந்த ஷீட்டை ஆயுதம் கொண்டு திறந்த போது டோரின் உள் அறைகளில் பெரிய பெரிய பொட்டலம் திணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அத்தனையும் அசல் கஞ்சா என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டனர். இது போன்று காரின் நான்கு டோர்களிலும் மறைத்து வைக்கப்பட்ட 30 பாக்கெட்களில் சுமார் 65 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

விசாரணையில் அவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செம்பெட்டி பிரம்மையா, சொலசானி ஹரிபாபு என்று தெரிய வந்திருக்கிறது. தெலங்கானாவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கொல்லம் திருவனந்தபுரம் ஏஜெண்ட்களுக்கு சப்ளை செய்யக்கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

தெலங்கானாவின் மாவோயிஸ்ட்கள் மறைந்து வாழும் பகுதியில் விளைகிற முதல் தர கஞ்சா இது. இங்குள்ள மார்க்கெட்டின் படி இதன் ஹோல்சேல் விலை ஒரு கோடி. ரீட்டெய்லில் விலை டபுள். மொத்தக் கஞ்சாவையும் காரையும் கைப்பற்றினாலும் பிடிபட்டவர்கள் கூலிக்கு கடத்துபவர்கள். இதன் டோட்டல் ப்ளானையும் அறிய மேல் விசாரணைக்காகத் தென்மலைக் காவல் நிலையம் கொண்டு போவதாகத் தெரிவித்த க்ரைம் பிரான்ஞ் டி.ஒய்.எஸ்.பி.யான அசோக்குமார், கடத்தல் வகையில் புது டெக்னிக் அதனால்தான் ஆந்திரா, தமிழகம் தப்பி எங்களிடம் சிக்கியுள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.