Skip to main content

சிறு கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- முதல்வர் குமாரசாமி 

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
k


கர்நாடகாவில் 3 மக்களவை மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 4 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஷிமோகா மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இந்நிலையில் இடைத்தேர்தலில் பாஜக-விற்கு ஏற்பட்டுள்ள தோல்வி, எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க சிறு கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” - டி.கே.சிவக்குமார்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

DK Sivakumar says I will quit politics if Kumaraswamy proves his allegations

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 68,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதனிடையே, ,வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

 

இந்த நிலையில்,குமாரசாமி நேற்று (21-11-23) போஸ்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கர்நாடகாவில் ஆபாச படங்களை திரையிட்டவரை தான் ஆட்சி அதிகாரத்தில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், இந்த மாதிரி ஆட்களிடம் தான் அதிகாரத்தை கொடுத்துள்ளது.  இது போன்ற படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால் இப்படி தான் போஸ்டர்களை ஒட்டுவார்கள்” என விமர்சித்து குற்றம் சாட்டினார்.

 

குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “குமாரசாமியை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனது தொகுதி கனகபுராவிற்கு சென்று நான் ஆபாச படங்களை திரையிட்டேனா? என்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி அங்கு யாராவது, நான் அந்த மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னாலோ அல்லது குமாரசாமி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபித்தாலோ நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. அவரது தரத்திற்கு இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு தான் அவமானம்” என்று கூறினார். 

 

 

Next Story

71 யூனிட் திருட்டு; குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 71 units of theft; Kumaraswamy was fined Rs 68,000

 

மின்சாரம் திருடிய குற்றத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது கர்நாடகா அரசு.

 

கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசும் வீடியோ காட்சிகளை சம்பந்தமின்றி பரப்பி வருவதாக குமாரசாமி மீது கர்நாடகா காங்கிரசினர் புகார் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் 71 யூனிட் மின்சாரம் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது குமாரசாமிக்கு 68,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பெங்களூர் மின்சார வாரியம்.