Skip to main content

பிரபு நடித்த விளம்பரத்தை வாபஸ் வாங்கியது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம்!  

Published on 23/07/2018 | Edited on 24/07/2018

"நம்பிக்கை அதுதானே எல்லாம்" என்னும் வாக்கியம் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது பிரபுவும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸும். அந்த 'கல்யாண்' ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரம் அந்நிறுவனத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்பொழுதும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸ் 'நம்பிக்கை' என்னும் மையக் கருத்தைக் கொண்டுதான் தனது விளம்பரங்களை வடிவமைக்கும். கல்யாண் ஜூவல்லர்ஸ், 'லண்டனை' தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் 'எல்&கே சாட்சி & சாட்சி' என்னும் விளம்பர நிறுவனம் மூலம்தான் தனது விளம்பரங்களை வடிவமைத்து வருகிறது.

 

prabhu ad



கல்யாண் ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரத்தில் வங்கி ஊழியர்கள் அலட்சியமாய் நடந்து கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கிக்கு பிரபு தனது பேத்தியுடன் சென்று, தனது வாங்கிக்கணக்குக்கு பென்ஷன் பணம்  இரு முறை வந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வங்கி மேலாளர் "யாருக்குத் தெரியப் போகுது, கண்டுக்காதீங்க, நீங்களே வச்சுக்கங்க. இது பெரிய வேலை " என்றதும் பிரபு "யாருக்குத் தெரியாட்டியும் எனக்குத் தெரியும், தப்பு தப்புதான்" என்று உறுதியுடன் கூற அந்த வங்கி மேலாளர் அதற்கான வேலையை செய்வது போல அந்த விளம்பரம் முடியம்.

 

 


இதே விளம்பரம் ஹிந்தியில் அமிதாப் பச்சனும் அவரது மகள் ஸ்வேதா பச்சனும் நடிக்க படமாக்கப்பட்டிருந்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இதை பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் கண்டித்தன. கல்யாண் நிறுவனம் மீது வழக்கு தொடுப்போமென்றும் எச்சரித்தன. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரம் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனரான ரமேஷ் கல்யாணராமன், "நமது தற்போதைய விளம்பரம் மதிப்பிற்குரிய வங்கி ஊழியர் சமூகத்தைக்  காயப்படுத்தியுள்ளது. அந்த விளம்பரம் எந்த உள்நோக்கத்துடனும் வரையறுக்கப் படவில்லை, அது வெறும் கற்பனை அடிப்படையில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது, மற்றபடி வங்கி ஊழியர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் காட்சிப்படுத்தியது இல்லை. மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நாங்களும் வங்கி ஊழியர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை ஒப்புக்கொள்கிறோம்" என்று கூறினார். ஆனால், அதன் தமிழ் வடிவம் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.   

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The High Court ordered the Election Commission to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

The High Court ordered the Election Commission to take action

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயனா அமர்வில் இன்று (15.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிடுகையில், “தேர்தல் விளம்பரஙகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இது குறித்து வரும் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

தேர்தல் விளம்பரம்; நீதிமன்றத்தை நாடிய திமுக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
election advertising DMK sought the court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களின் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.