Skip to main content

குடிசைவாசிகளின் இட ஒதுக்கீடை பறித்து முற்பட்டோருக்கு கொடுக்க மோடி அரசு முடிவு!

Published on 07/01/2019 | Edited on 07/01/2019
modi


உயர்சாதியினர் இதுவரை பொதுப்பிரிவில்தான் வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் இடம்பெற்று வந்தார்கள். சாதிவாரி இடஒதுக்கீடுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற போர்வையில் முற்பட்ட வகுப்பினருக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.


 
ஜாதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்ஜாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று, நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டோருக்கு இலக்கணம் என்ன தெரியுமா?
 

1.ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
 

2.விவசாய நிலம் 5 ஹெக்டேருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 

3.1000 சதுர அடிக்குள் வீடு இருக்க வேண்டும்.
 

4.நகராட்சிகளுக்குள் 324 சதுர அடிக்குள் வீட்டு மனைக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 

5.அங்கீகாரம் பெறாத நகராட்சிக்குள் 624 சதுர அடிக்குக் குறைவாக வீட்டு மனை வைத்திருக்க வேண்டும்.

 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்கான வரைமுறையே கேலிக்குரியதாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு சொத்து வைத்திருப்பவர்கள், சொத்தே இல்லாத குடிசைவாசிகளின் இட ஒதுக்கீடை பறிக்க பாஜக அரசு முடிவெடுத்திருப்பது மிகப்பெரிய அநீதி என்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகும் என்று சமூகநீதி ஆதரவாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.