Skip to main content

உலகில் அதிக மாசு - முதலிடத்தில் தலைநகரம்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

air pollution

 

உலகில் அதிக மாசு நிறைந்த 10 நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. ஒரு ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

ஹெல்த் எஃபெக்ட் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனம் சமீபத்தில் "நகரங்களில் காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியம்" என்னும் தலைப்பில்  ஒரு ஆய்வை  மேற்கொண்டது. உலகெங்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 7000 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 103 நகரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது. ஹெல்த் எஃபெக்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பினர் காற்றில் தூசித்துகள்கள் கலந்துள்ள விதம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு கலந்துள்ள விதம் ஆகிய இரண்டு விஷயங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் அதிக மாசு கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை டெல்லி பெற்ற நிலையில் இரண்டாம் இடத்தை கொல்கத்தாவும், மும்பை 14ம் இடத்திலும் உள்ளது. முதல் இருபது இடங்களுக்குள் மற்ற இந்திய நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. 2019ம் ஆண்டு மட்டும் டெல்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக  29,900 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் கொல்கத்தாவில் 21,380 மரணங்களும் மும்பையில் 16,020 மரணங்களும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.